மல்லை சத்யா நிரந்தர நீக்கம்.. வைகோ பரபரப்பு அறிக்கை? முழு விவரம்!

Vaiko: ம.தி.மு.க. கட்சியில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையில் வைகோ என்ன கூறியுள்ளார் தெரியுமா?

Published on: September 8, 2025 at 8:01 pm

சென்னை, செப்.8 2025: ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், “ம.தி.மு.க.வின் வாழ்நாள் உறுப்பினரான மல்லை சத்யா நீக்கப்படுகிறார்” எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், “சி.ஏ. சத்யா ஆகிய தாங்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் வகித்த துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்தும், தங்களை நிரந்தரமாக ஏன் நீக்க கூடாது என 17-08-2025 அன்று விளக்கம் கேட்டு கழக சட்டதிட்டங்கள் படி – நான் அறிவிப்பு வழங்கியிருந்தேன்.

அந்த அறிவிப்பை, 19-08-2025 அன்று பெற்றுக் கொண்டு தாங்கள் அளித்துள்ள, 24-08-2025 தேதியிட்ட பதில் அறிவிப்பு, மின்னஞ்சல் மூலமாகவும், 27-08-2025 அன்று பதிவு அஞ்சல் மூலமாகவும் கிடைக்கப் பெற்றேன். தாங்கள் அளித்துள்ள பதில் அறிவிப்பை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு 06-09-2025 அன்று ஆய்வு செய்து அறிக்கை அளித்தது.

பதில் அறிவிப்பில் குற்றச்சாட்டுக்களை நீங்கள் மறுக்க வில்லை. குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமும் அளிக்க வில்லை. தாங்கள் அளித்துள்ள பதில் அறிவிப்பு ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட முகாந்திரமாக இல்லை. தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கான பதில் முற்றிலும் ஏற்கத் தக்கது அல்ல. தங்கள் மீதுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்படுகிறது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

நிரந்தர நீக்கம்

மேலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை குறிக்கோள், நன்மதிப்பு, ஒற்றுமை ஆகியவற்றிற்கு கேடு விளைவிக்கும் வகையில், பொது வெளியில் கட்சிக்கும், தலைமைக்கும் எதிராக செயல்பட்டு, கழக சட்ட திட்டங்கள் விதி-35 பிரிவு 2-ன் படி, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றம் புரிந்து, கழக சட்ட திட்டங்கள் விதி-35 பிரிவு 6-ன் படி, ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளாகி துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கும் தங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின், சட்ட திட்டங்கள் விதி-19, பிரிவு-5, விதி-19, பிரிவு-12, விதி-35, பிரிவு-14, விதி-35, பிரிவு-15 இன் படி துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கழகத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கி அறிவிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மல்லை சத்யா பதில்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் இந்ந நடவடிக்கை ஜனநாயக படுகொலை எனக் குறிப்பிட்டுள்ள மல்லை சத்யா, தனது மகனுக்கான இந்த நடவடிக்கையை வைகோ செய்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், என் மீதான நடவடிக்கை நான் எதிர்பார்த்த ஒன்றுதான் எனவும் மல்லை சத்யா கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இராமநாதபுரம் பாலைவனம் ஆவதை தடுக்க முடியாது.. அன்புமணி எச்சரிக்கை

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com