சிறுநீரகக் கொள்ளை பதற்றம் தீரும் முன்பே கல்லீரல் திருட்டு? பகீர் கிளப்பும் அன்புமணி ராமதாஸ்

“சிறுநீரகக் கொள்ளை பதட்டம் தீரும் முன்பே கல்லீரல் திருட்டு” என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்.

Published on: August 19, 2025 at 10:29 pm

சென்னை, ஆக.19 2025: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “நாமக்கல் மாவட்டத்தில் பெருமளவில் சிறுநீரகக் கொள்ளை நடந்ததால் மக்களிடம் ஏற்பட்ட அச்சமும், பதட்டமும் விலகுவதற்கு முன்பாகவே , அதே மாவட்டத்தில் ஏழைகளைக் குறிவைத்து கல்லீரல் திருட்டும் நடைபெற்றிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
போதைப் பொருள் விற்பனையில் தொடங்கி மனித உடல் உறுப்புத் திருட்டு வரை அனைத்து சட்டவிரோத செயல்களையும் திமுக அரசு ஊக்குவித்து வருவது கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்க அறிக்கையில், “நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகரத்தைச் சேர்ந்த 37 வயது பெண்மணி ஒருவர் கந்து வட்டிக்கு வாங்கியக் கடனை அடைக்க முடியாமல் தடுமாறி வந்த நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அவரை அணுகிய தரகர்கள் அவரது சிறுநீரகத்திற்கு ரூ.8 லட்சம் விலை பேசியுள்ளனர். அவரை சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஆய்வு செய்த போது அவரது சிறுநீரகத்த்தை மாற்ற முடியாது என்று தெரியவந்துள்ளது. அதனால், அவருக்கு மருத்துவ ஆய்வு செய்ய ஆன செலவுகளை தரும்படி அந்த பெண்ணை மிரட்டிய தரகர்கள், ஒரு கட்டத்தில் அவரது கல்லீரலை எடுத்துக் கொண்டு அதற்காக ரூ.4.5 லட்சத்தை மட்டும் கொடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இரத்த உறவு இல்லாதவர்களுக்கு உடல் உறுப்புகளைக் கொடையாக வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து விதிகளையும் மீறி நாமக்கல் மாவட்டத்தில் வறுமையில் வாடும் மக்களை மூளைச்சலவை செய்து அவர்களின் சிறுநீரகங்களை திருடியுள்ளனர். சிறுநீரகத்தை எடுக்க முடியாத நிலையில் கல்லீரலைத் திருடியுள்ளனர். அப்படியானால், தமிழ்நாட்டில் உடல் உறுப்பு வணிகம் எந்த அளவுக்கு வெளிப்படையாக நடந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, “தமிழ்நாட்டில் போதை மருந்துக் கடத்தல் முதல் உடல் உறுப்புத் திருட்டு வரை அனைத்தையும் செய்பவர்கள் திமுகவுடன் சம்பந்தப்பட்டவர்கள் தான். இத்தகைய சட்டவிரோத செயல்களை தடுத்து நிறுத்த வேண்டிய திராவிட மாடல் அரசு அத்தகைய குற்றங்களுக்கு துணை போகிறது. தமிழ்நாட்டில் ஏழை மக்களின் உடல் உறுப்புகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத சூழலை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனை ஆகும். இதற்கெல்லாம் சேர்த்து வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நம் எதிர்ப்பை கண்டு உத்ரவாதம் அளித்த மோடி, ஷா.. மு.க ஸ்டாலின் பரபரப்பு ட்வீட்! MK Stalin

நம் எதிர்ப்பை கண்டு உத்ரவாதம் அளித்த மோடி, ஷா.. மு.க ஸ்டாலின் பரபரப்பு

MK Stalin : தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்….

மு.க. ஸ்டாலின் வடக்கு-தெற்குப் பிளவை உருவாக்க முயற்சிக்கிறார்..எம்.பி. ஷாம்பவி சௌத்ரி Shambhavi Choudhary

மு.க. ஸ்டாலின் வடக்கு-தெற்குப் பிளவை உருவாக்க முயற்சிக்கிறார்..எம்.பி. ஷாம்பவி சௌத்ரி

Shambhavi Choudhary : மு.க. ஸ்டாலின் வடக்கு-தெற்குப் பிளவை உருவாக்க முயற்சிக்கிறார் என்று எல்ஜேபி (ராம் விலாஸ்) எம்.பி. ஷாம்பவி சௌத்ரி தெரிவித்தார்….

Tamil News Updates April 17 2026: கனிமொழி என்பவர் குடும்ப எம்.பி… அண்ணாமலை

Tamil News Updates April 17 2026: கனிமொழி என்பவர் குடும்ப எம்.பி… அண்ணாமலை

Tamil News Updates April 17 2026 : தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….

சபரிமலை கூட்டத்தில் காக்கி உடையில் மோகன் லால்.. மீண்டும் போலீஸ் கதாபாத்திரம்! Mohanlal’s L 366

சபரிமலை கூட்டத்தில் காக்கி உடையில் மோகன் லால்.. மீண்டும் போலீஸ் கதாபாத்திரம்!

Mohanlal’s L 366: மோகன்லாலின் 366வது படமான புதிய படத்துக்கு அதிமனோகரம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது; இந்தப் படத்தின் போஸ்டரும் வெளியாகியுள்ளது….

ஹலோ மிஸ்டர் மோடி.. பிரான்சில் இருந்து வந்த அழைப்பு.. என்ன பேசினார் மேக்ரோன்? Narendra Modi

ஹலோ மிஸ்டர் மோடி.. பிரான்சில் இருந்து வந்த அழைப்பு.. என்ன பேசினார் மேக்ரோன்?

Narendra Modi: பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினார்; அப்போது, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ‘தடையற்ற கப்பல் போக்குவரத்து குறித்து…

சாணக்கியரே அதிர்ந்து இருப்பார்.. அமித் ஷாவை விமர்சித்த பிரியங்கா காந்தி! Priyanka Gandhi

சாணக்கியரே அதிர்ந்து இருப்பார்.. அமித் ஷாவை விமர்சித்த பிரியங்கா காந்தி!

Priyanka Gandhi: சாணக்கியர் இன்று உயிரோடு இருந்திருந்தால் அதிர்ச்சி அடைந்திருப்பார் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்….

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com