டெல்லியில் பரபரப்பு.. அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு.. நீதிமன்றம் உத்தரவு!

FIR against Arvind Kejriwal: டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published on: March 11, 2025 at 8:10 pm

டெல்லியில், பெரிய விளம்பரப் பலகைகளை வைப்பதில் மக்கள் பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், ஆம் ஆத்மி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதாவது, இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிறருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யுமாறு டெல்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11, 2025) டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நேஹா மிட்டல், “இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 156(3) உள்ள விண்ணப்பம் அனுமதிக்கப்படத் தகுதியானது என்று இந்த நீதிமன்றம் பரிசீலிக்கிறது.
இதன்படி, டெல்லி சொத்துக்களை சிதைப்பதைத் தடுக்கும் சட்டம், 2007 இன் பிரிவு 3 இன் கீழ் உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” எனத் தெரிவித்து இருந்தார்.

டெல்லியில் ஆட்சி மாற்றம்

டெல்லியில் 2025 பிப்ரவரி 5ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்.8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன
இதில் ஆம் ஆத்மி 22 தொகுதிகளிலும், பாரதிய ஜனதா 48 தொகுதிகளில் வெற்றிப் பெற்று ஆட்சியை பிடித்தது.

புதுடெல்லி சட்டமன்ற தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால், பாரதிய ஜனதா வேட்பாளரிடம் வெற்றியை இழந்தார். ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்கள் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டனர். மாநிலத்தின் முதலமைச்சராக ரேகா குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சித் தலைவராக அதிஷி மர்லேனா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நிதி அமைச்சருடன் தொல் திருமாவளவன் திடீர் சந்திப்பு; முன்வைத்த கோரிக்கை என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com