நகை கடன் பெற்றவர்கள் மறு அடகு.. ரிசர்வ் வங்கி உத்தரவை திரும்ப பெறுக.. வைகோ

Vaiko: நகை கடன் பெற்றவர்கள் மறு அடகு தொடர்பான ரிசர்வ் வங்கியின் அறிக்கையை மறுபரிசீலனை செய்க என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Published on: February 25, 2025 at 7:08 pm

சென்னை, பிப்.25: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், “பொதுமக்கள் அவசரகால பண தேவைக்கு வங்கிகளில் நகை கடன் பெறுவது இன்றியமையாதது ஆகிறது. ஏழை எளிய மக்கள் மற்றும் வேளாண் தொழில் செய்யும் உழவர்கள் தங்கள் தேவைக்கு நகைக் கடனையே பெரிதும் நம்பியுள்ளனர்.

தனியார் நிறுவனங்களில் நகைகளை அடகு வைத்தால், அதிக வட்டி செலுத்த வேண்டி வரும். இதனால் பலரும் வங்கிகளில் நகைக் கடன் பெறுகின்றனர். ஆண்டிற்கு ஒரு முறை வட்டி கட்டி திருப்பி கொள்ளலாம் என்ற விதிகள் உள்ளதால் பலரும் வங்கிகளில் நகை கடன் பெற விரும்புகின்றனர். இருப்பினும், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளால் வங்கியில் நகை கடன் வாங்குபவர்களில் பலர் தற்போது ஆழ்ந்த கவலையில் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் எதிரி அல்ல.. மு.க ஸ்டாலின்!

தொடர்ந்து, நகை கடன் பெற்றவர்கள் மறு அடகு வைப்பதில் கடுமையான நிபந்தனைகளைகளுடன் ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறையின்படி, வங்கியில் அடகு வைத்துள்ள நகைகளை முழுவதும் பணம் செலுத்தி திருப்பி, மறுநாள் தான் மீண்டும் அடகு வைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்டி மட்டும் கட்டி அதே தினத்தில் மறு அடகு வைக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. இதனால் கடன் வாங்கியவர்கள் முழு பணத்தையும் புரட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே ஒன்றிய நிதித்துறை அமைச்சகம் இதில் தலையிட்டு பொதுமக்கள் நகை கடன் பெறுவதற்கு புதிய வழிகாட்டுதல் உத்தரவை திரும்பப் பெற்று ,பழைய விதிமுறைகளையே வங்கிகள் பின்பற்ற ஆவன செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுகிறேன்.. கனத்த இதயத்துடன் காளியம்மாள்!

மாணவர்களுக்கு முதலில் நல்ல ஒழுக்கத்தையும், பாலியல் கல்வியையும் கற்றுத் தர வேண்டும்… பள்ளிக் கல்வித்துறைக்கு வானதி சீனிவாசன் வேண்டுகோள்
Vanathi Srinivasan

மாணவர்களுக்கு முதலில் நல்ல ஒழுக்கத்தையும், பாலியல் கல்வியையும் கற்றுத் தர வேண்டும்… பள்ளிக்

5 லட்சத்தைக் கடந்த அரசுத்துறை காலிப் பணியிடங்கள்.. உடனே நிரப்பி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்..அன்புமணி ராமதாஸ்
Anbumani Ramadoss

5 லட்சத்தைக் கடந்த அரசுத்துறை காலிப் பணியிடங்கள்.. உடனே நிரப்பி இளைஞர்களுக்கு அரசு

அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர் சிகிச்சை அளிக்கும் அவலம்.. உடனடி நடவடிக்கை தேவை.. டிடிவி தினகரன்
TTV Dinakaran

அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர் சிகிச்சை அளிக்கும் அவலம்.. உடனடி நடவடிக்கை தேவை..

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

Recent Post

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com