எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் எதிரி அல்ல.. மு.க ஸ்டாலின்!

New Education Policy Row: எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் நாங்கள் எதிரி அல்ல என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார்.

Published on: February 22, 2025 at 2:34 pm

Updated on: February 22, 2025 at 2:41 pm

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், ” நாம் எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் எதிரி அல்ல; ஆனால் எந்த மொழியை திணிக்க நினைத்தாலும் நாங்கள் எப்போதும் எதிர்ப்போம்” என்றார்.
கடலூரில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ” மொழி திணிப்பை எதிர்ப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்தியை திணிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே நாங்கள் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கவில்லை. இது மாணவர்களை பள்ளிக்கூடங்களில் இருந்து விரட்டும் ஓர் கொள்கை. பள்ளிக்கூடத்தை விட்டு துரத்துகிற கொள்கை. இதனை நாங்கள் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் உணர்த்தி உள்ளோம்.

தொடர்ந்து இதை நாங்கள் உணர்த்துவோம். ஒன்றிய அரசின் இந்த கொள்கையால் என்னென்ன பாதிப்புகள் வரும் என்பதை மட்டும் நான் இங்கு சிலவற்றை கூறுகிறேன். நாம் கடைப்பிடிக்கும் சமூக நீதிக் கொள்கையை இது நீர்த்துப் போகச் செய்யும். நாம் பட்டியல் மற்றும் பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறோம். இதனை ஒன்றிய அரசின் திட்டம் மறுக்கிறது.

மூன்றாம் வகுப்பிலேயே பொது தேர்வு தொடங்குகிறது. ஐந்தாம் வகுப்பிலும் பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது தேர்வுகள் மூலம் குழந்தைகளை வடிகட்ட பார்க்கிறார்கள்.
ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை செமஸ்டர் கல்விமுறையை கொண்டு வர போகிறார்கள். இதன் மூலம் உங்களின் மகளோ அல்லது மகனோ விரும்பிய கல்லூரியில் விரும்பிய இடத்தில் போய் சேர முடியாது.

அதாவது தற்போது மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு இருப்பது போல் இன்ஜினியரிங் மற்றும் கலைக் கல்லூரியில் இணைவதற்கும் பொது தேர்வுகள் வைக்கப்படும். இதை அந்தக் கல்லூரி கூட நடத்தாது; மாறாக தேசிய அளவில் ஏஜென்சியை வைத்து நடத்துவார்கள்.

இதைவிட கொடுமை என்ன தெரியுமா? பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிப்பை தொடர முடியாத மாணவர்கள் அவர்களாகவே வெளியேறலாம் என கூறுகிறார்கள்.
நான் கேட்கிறேன்.. படிக்காமல் போ என விரட்டுவதற்கு இது சமமா இல்லையா? ஆறாம் வகுப்பு முதல் தொழில் கல்வி என்ற பெயரில் குலத் தொழில் திட்டத்தை அறிமுகப்படுத்தப் போகிறார்கள்.
படித்து முன்னேற நினைக்கும் மக்களை மீண்டும் குலத்தொழில் நோக்கி தள்ளப் பார்க்கிறார்கள்” என்றார்.

தமிழ்நாட்டில் மூன்று மொழி கல்விக் கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
“ரூ.5 ஆயிரம் கோடி அல்ல; ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கினாலும் நாங்கள் இந்த திட்டத்தை அமல்படுத்த மாட்டோம்” எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகல்? காளியம்மாளை சுற்றும் வதந்தி!

கன்னியாகுமரியில் மூன்று நாட்கள் உள்ளூர் விடுமுறை; எந்தெந்த தினங்கள் தெரியுமா?


திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com