How to make semiya kuzhipaniyaram | சுவையான சேமியா குழிப்பணியாரம் இப்படி செஞ்சு பாருங்க.
How to make semiya kuzhipaniyaram | சுவையான சேமியா குழிப்பணியாரம் இப்படி செஞ்சு பாருங்க.
Published on: December 28, 2024 at 9:38 am
How to make semiya kuzhipaniyaram | குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய சேமியாவை பயன்படுத்தி செய்யக்கூடிய சுவையான சேமியா குழிப்பணியாரம் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
சேமியா -1 கப்
ரவை – ¾ கப்
அரிசி மாவு -1 டேபிள் ஸ்பூன்
தயிர் -¾ கப்
கொத்தமல்லி இலை- ஒரு கைப்பிடி அளவு
உப்பு- தேவையான அளவு
தாளிதம் தயாரிக்க
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
கடுகு-½ டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு -½ டீஸ்பூன்
கடலைப்பருப்பு -1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -¼ டீஸ்பூன்
பச்சை மிளகாய் -2
இஞ்சி-1 சிறிய துண்டு
மஞ்சள் தூள் – சிறிதளவு
பெரிய வெங்காயம்-1
கருவேப்பிலை – சிறிதளவு
கேரட் -2
செய்முறை
ஒரு பாத்திரத்தில் சேமியா சேர்த்து அடுப்பு தீயை லோ பிளேமில் வைத்து வறுக்கவும். சேமியா சேர்த்து இரண்டு நிமிடத்திற்கு பின்னர் ரவை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். பின்னர் இதனுடன் அரிசி மாவு மற்றும் தயிர் சேர்த்து கலந்து விடவும். இதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து அரை மணி நேரம் வரை ஊற விடவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்ததும் அடுப்பு தீயை லோ பிளேமில் வைத்து உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு பெருங்காயத்தூள், சிறு துண்டுகளாக நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், நறுக்கிய கருவேப்பிலை மற்றும் துருவிய கேரட் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதை ஏற்கனவே தயார் செய்து ஊற வைத்த மாவுடன் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். பின்னர் இதனுடன் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை , தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விட வேண்டும். இந்த மாவு இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும். மாவு தயார் செய்த பின்னர் குழிப் பணியார சட்டியில் எண்ணெய் இட்டு ஒவ்வொரு குழிகளிலும் முந்திரி அல்லது சிறிது சேமியா சேர்த்து பின்னர் அதில் தயார் செய்து வைத்த மாவினை சேர்க்க வேண்டும்.
பணியாரம் பாதி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைக்க வேண்டும். பணியாரம் இரண்டு பக்கமும் நன்கு வெந்த பின்னர் எடுக்க வேண்டும். இப்போது சுவையான சேமியா குழி பணியாரம் தயார். இதை சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
இதையும் படிங்க : காரமான கனவா மீன் மசாலா ; ஜம்முன்னு செஞ்சு சாப்பிடுங்க !
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com