உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார் தமிழக வீரர் குகேஷ்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார் தமிழக வீரர் குகேஷ்.
Published on: December 12, 2024 at 7:52 pm
Updated on: December 13, 2024 at 9:08 am
World Chess Championship 2024 | உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி நவம்பர் 25 ஆம் தேதி துவங்கியது. இந்த தொடர் (டிசம்பர் 13) இன்றுடன் நிறைவடைந்தது. இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் மற்றும் நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையில் நடைபெற்றது. இந்த போட்டி 14 சுற்றுகள் கொண்டது. முதலில்7.5 புள்ளிகளை எட்டும் வீரர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார்.
இதுவரை நடந்து முடிந்த 13 சுற்றுகளின் முடிவில் குகேஷ் 6.5 புள்ளிகளுடனும், லிரென் 6.5 புள்ளிகளுடனும் சமநிலையில் இருந்தனர். இந்நிலையில், இன்று இறுதி ஆட்டம் நடைபெற்றது. பரப்பரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் டிராவில் முடியும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குகேஷ் டிங் லிரெனை 58ஆவது நகர்த்தலில் தோற்கடித்தார்.
இதன் மூலம் தமிழக வீரரான குகேஷ் உலக சாம்பியன் ஆனார். இதன் மூலம் 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார். வெற்றி பெற்றுள்ள குகேஷுக்கு இந்திய மதிப்பில் ரூ. 20.8 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க பி.சி.சி.ஐ இடைக்கால செயலாளராக தேவஜித் சைகியா நியமனம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com