எதிர் கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்ட நிலையில் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எதிர் கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்ட நிலையில் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Published on: November 25, 2024 at 1:19 pm
Winter Session of Parliament | நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று (நவம்பர் 25) துவங்கியது. மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தங்கர் தலைமை வகித்தார். தற்போது அனைத்துக் கட்சிக் குழுவின் பரிசீலனையில் உள்ள வக்பு (திருத்த) மசோதா, மணிப்பூர் வன்முறை, அதானி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை வலியுறுத்தி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் 12 மணிக்கு தொடங்கிய நிலையில், எதிர்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்ற மாநிலங்களவை, மக்களவை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. நாளை அரசியல் சாசன தினம் கொண்டாடப்படுவதால் இரு அவைகளின் வழக்கமான அமர்வுகள் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com