900 ஏவுகணைகள், 2,500 ட்ரோன்கள்.. வளைகுடா நாடுகளை தாக்கிய ஈரான்!

Iran-Israel War: வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகள் 900-க்கும் மேற்பட்ட ஈரான் ஏவுகணைகள், 2,500 ட்ரோன்கள் மற்றும் 17 விமானங்களை தடுத்து நிறுத்தியுள்ளன பக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published on: March 12, 2026 at 10:20 am

துபாய் மார்ச் 12 2026; ஐ.நா.வில் பஹ்ரைனின் நிரந்தர பிரதிநிதி ஜமால் ஃபாரஸ் அல் ரோவை, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகள் மொத்தமாக 954-க்கும் மேற்பட்ட ஈரான் ஏவுகணைகள், 2,500 ட்ரோன்கள் மற்றும் 17 விமானங்களை தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிவித்தார். ஆறு உறுப்பினர் கொண்ட GCC மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் வர்த்தக மற்றும் கடல்சார் பாதைகளை பாதித்து, பிராந்திய மற்றும் சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி, அனைவரையும் பாதிக்கின்றன என அவர் கூறினார்.

நேற்று கவுன்சில் அறைகளுக்கு வெளியே மற்ற GCC தூதர்களுடன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரான் தாக்குதல்கள் குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பகுதிகள், உணவுப் பொருள் விநியோக நிலையங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், ஆற்றல் நிலையங்கள் மற்றும் முக்கிய குடிமக்கள் அடிப்படை வசதிகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

ஐ.நா.வில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) நிரந்தர பிரதிநிதி முகமது அபுஷஹாப் தெரிவித்ததாவது, UAE தங்களின் நிலம், வான்வழி மற்றும் கடற்பரப்பை ஈரானை தாக்குவதற்காக பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்று தெளிவாக அறிவித்திருந்தபோதிலும், ஈரான் அந்நாட்டைத் தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க; ஈரானில் அமில மழை எச்சரிக்கை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com