எப்ஸ்டீன் தொடர்பு.. இங்கிலாந்து முன்னாள் இளவரசர் கைது.. பரபரப்பு தகவல்கள்!

Former Prince Andrew: இங்கிலாந்தின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ (Andrew Mountbatten-Windsor) எப்ஸ்டீன் தொடர்பான தவறான நடத்தை விசாரணையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Published on: February 19, 2026 at 9:17 pm

லண்டன் பிப்ரவரி 19, 2026;இங்கிலாந்தின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ (Andrew Mountbatten-Windsor) எப்ஸ்டீன் தொடர்பான தவறான நடத்தை விசாரணையில் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் வெளிவந்த எப்ஸ்டீன் கோப்புகள், ஆண்ட்ரூ தனது இங்கிலாந்து வர்த்தக தூதராக இருந்த காலத்தில் ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு ரகசிய ஆவணங்களை அனுப்பியதாகக் கூறுகின்றன. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பின்னணி தகவல்கள்

இளவரசர் ஆண்ட்ரூ, ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் இருந்த தொடர்புகளுக்காக நீண்ட காலமாக விமர்சனத்திற்குள்ளாகி வருகிறார். 2019 ஆம் ஆண்டு, பொதுமக்களின் கடுமையான விமர்சனத்திற்குப் பிறகு, அவர் அனைத்து அரச பொறுப்புகளிலிருந்தும் விலகினார்.

2022 ஆம் ஆண்டு, விர்ஜினியா ஜியூஃப்ரே தாக்கல் செய்த சிவில் வழக்கை அவர் நீதிமன்றத்திற்கு வெளியே உடன்பாடு செய்து தீர்வு கண்டார். எனினும், அவர் குற்றச்சாட்டுகளை மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க; சீனாவில் பட்டாசு வெடிப்பு விபத்து.. 12 பேர் உயிரிழப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com