Jaishankar Germany Visit: ‘இந்தியா ஒருபோதும் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணியாது’ என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் கூறினார்.
Jaishankar Germany Visit: ‘இந்தியா ஒருபோதும் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணியாது’ என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் கூறினார்.
Published on: May 23, 2025 at 10:44 pm
Updated on: May 23, 2025 at 10:47 pm
பெர்லின் (ஜெர்மனி) மே 23 2025: ‘இந்தியா ஒருபோதும் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணியாது’ என ஜெர்மனி நாட்டில் இருந்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் பாகிஸ்தான் நாட்டுக்கு வலுவான செய்தி ஒன்றை அளித்துள்ளார்.
ஜெர்மன்-இந்தியா அமைச்சர்கள் பெர்லினில் சந்தித்துப் பேசுகையில் அமைச்சர் ஜெய்சங்கர் இதனை கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலளித்ததைத் தொடர்ந்து நான் பெர்லினுக்கு வந்துள்ளேன்.
#WATCH | EAM Dr S Jaishankar says, "I come to Berlin in the immediate aftermath of India responding to the Pahalgam terror attack. India has zero tolerance for terrorism. India will never give in to nuclear blackmail, and India will deal with Pakistan purely bilaterally. There… pic.twitter.com/QhKfFsYmNO
— ANI (@ANI) May 23, 2025
பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது” என்றார். இதனை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
In conversation with @KiraVinke & Claudia Schmucker at @dgapev in Berlin.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) May 23, 2025
🇮🇳 🇩🇪
https://t.co/xtCEZ3797p
பஹல்காம் தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் உள்ளூர்வாசி ஒருவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்தியப் பெண்களின் கணவன்மார்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை முன்னெடுத்தது.
மேலும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்நிலையில், பாகிஸ்தான் அணு ஆயுத மிரட்டல்களை விடுத்தது. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு வலுவான செய்தியை ஜெய் சங்கர் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும்ப படிங்க : ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட தடை; என்ன காரணம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com