அமெரிக்காவில் கோவிலில் இருந்து திரும்பிய நிலையில் மாயமான 4 இந்தியர்கள் கார் விபத்தில் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் கோவிலில் இருந்து திரும்பிய நிலையில் மாயமான 4 இந்தியர்கள் கார் விபத்தில் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on: August 3, 2025 at 3:13 pm
நியூயார்க், ஆக.3 2025: அமெரிக்காவின் தலைநகர் நியூயார்க்கின் பஃபேலோவிலிருந்து மேற்கு வர்ஜீனியாவிற்கு சாலைப் பயணத்தின் போது காணாமல் போனதாக நம்பப்பட்ட நான்கு இந்திய வம்சாவளி குடும்ப உறுப்பினர்கள் கார் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் தெரியவந்துள்ளது.
இந்தக் கார் விபத்தில் பலியானவர்கள் டாக்டர் கிஷோர் திவான், ஆஷா திவான், ஷைலேஷ் திவான் மற்றும் கீதா திவான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது குறித்து அப்பகுதி அதிகாரிகளின் கூற்றுப்படி, “அவர்களின் வெளிர் பச்சை நிற டொயோட்டா கேம்ரி ஆகஸ்ட் 2 ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் மேற்கு வர்ஜீனியாவின் மார்ஷல் கவுண்டியில் உள்ள பிக் வீலிங் க்ரீக் சாலையில் ஒரு செங்குத்தான கரையில் கண்டெடுக்கப்பட்டது” எனத் தெரிவித்தனர்.
மேலும், “ஜூலை 29, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:45 மணியளவில் பென்சில்வேனியாவின் எரியில் உள்ள பீச் தெருவில் உள்ள பர்கர் கிங்கில் இந்தக் குடும்பம் கடைசியாகக் காணப்பட்டது” என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கார் விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com