மலைவேம்பு என நினைத்து கஞ்சா செடி வளர்த்த பெண்.. தூத்துக்குடியில் பரபரப்பு!

Woman in Thoothukudi grows cannabis plant: மலை வேம்பு என நினைத்து கஞ்சா செடியை வீட்டில் வளர்த்த பெண் ஒருவரால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.

Published on: April 3, 2025 at 10:12 am

தூத்துக்குடி ஏப்ரல் 3. 2025: தூத்துக்குடியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடி வளர்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தூத்துக்குடி மாவட்டம் ஆவுடையார் புரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கஞ்சா செடி போல் ஒரு செடி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலைத் தொடர்ந்து போலீசார் சம்பவ வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்தச் செடி குறித்தும் ஆய்வு செய்தார்கள். இதில் வீட்டில் வளர்க்கப்பட்ட செடி கஞ்சா செடி என்பது உறுதியானது.

இந்தச் செடி 8 அடி உயரத்திற்கு வளர்ந்து காணப்பட்டது. இதைத் தொடர்ந்து வீட்டில் இருந்த பெண்ணிடம் சப் இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அந்த வீட்டைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்மணி, “மலைவேம்பு என நினைத்து இந்த கஞ்சா செடியை இத்தனை நாளும் வளர்த்து வந்தது தெரிய வந்தது”. எனினும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் இருந்த கஞ்சா செடி பிடுங்கி எறியப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதையும் படிங்க அண்ணாமலையைப் பார்த்து திமுகவுக்கு பயம்; சொல்கிறார் கரு. நாகராஜன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com