தூத்துக்குடி- பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தூத்துக்குடி- பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Published on: August 29, 2024 at 7:15 pm
Updated on: August 29, 2024 at 7:19 pm
Tuticorin Palakkad Express train | தூத்துக்குடி- பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக தென்னக ரயில்வே விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “வண்டி எண் 16791 தூத்துக்குடி- பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடியில் இருந்து ஆக.31 காலை 10 மணிக்கு புறப்படும். இந்த ரயில் சேவை பராமரிப்பு பணிகள் காரணமாக அலுவா ரயில் நிலையத்தோடு நிறுத்தப்படும்.
அதேபோல் வண்டி எண். 16792 பாலக்காடு – தூத்துக்குடி பாலருவி எக்ஸ்பிரஸ், செப்., 1ம் தேதி மாலை 4.05 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்படும், ஆலுவாவில் இருந்து மாலை 6.05 மணிக்கு புறப்படும். இந்த ரயில் பாலக்காடு மற்றும் ஆலுவா இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என்று மண்டல ரயில்வேயின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க தாம்பரம்- நாகர்கோவில் ரயில் சேவை நீட்டிப்பு; புதிய மாற்றங்கள் என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com