தனிநபர் புகைப்படம் பதிவேற்றம்.. 3 ஆண்டு ஜெயில்: போலீஸ் எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் தனிநபர்களின் அனுமதியின்றி புகைப்படங்களைப் பகிர்ந்தால் 3 ஆண்டு சிறை அல்லது ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

Published on: August 28, 2024 at 10:56 pm

TN police warns | சமூக ஊடகங்களில் தனிநபர்களின் அனுமதியின்றி புகைப்படங்களைப் பகிர்ந்தால் 3 ஆண்டு சிறை அல்லது ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என புதிய வழிகாட்டல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதனால், சமூக ஊடகங்களில் ஒருவரின் அனுமதியின்றி அவரது புகைப்படங்களைப் பகிர்வோருக்கு 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படலாம்.

சென்னை போலீஸ் இதனை ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66E கீழ், அனுமதியின்றி புகைப்படங்களைப் பயன்படுத்துதல் குற்றமாகக் கருதப்படுகிறது.
இந்தக் குற்றத்திற்கு எதிரான தண்டனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும், தனியுரிமை பாதுகாப்பு முக்கியம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66E இன் அடிப்படையில் இது தனிநபர் புகைப்படங்களை அனுமதி இன்றி பகிர்வது குற்றமாகக் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கோவையில் பா.ஜ.க நிர்வாகி கொலை: 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்

வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz
ட்விட்டர் https://x.com/DravidanTimes
இன்ஸ்டாகிராம் https://www.instagram.com/dravidantimes/

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com