Tirunelveli | பணியில் சிறப்பாக செயல்பட்ட பணகுடி, ராதாபுரம் காவலர்களுக்கு டி.எஸ்.பி. பாராட்டு தெரிவித்தார்.
February 6, 2025
Tirunelveli | பணியில் சிறப்பாக செயல்பட்ட பணகுடி, ராதாபுரம் காவலர்களுக்கு டி.எஸ்.பி. பாராட்டு தெரிவித்தார்.
Published on: August 29, 2024 at 12:21 am
Tirunelveli | திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த பணகுடி மற்றும் ராதாபுரம் காவல்துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் Pa. மூர்த்தி ஐ.பி.எஸ் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
பணகுடி காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதியில் 23 ஆண்டுகளாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்த உதவி ஆய்வாளர் வினுகுமார் தலைமை காவலர் மகாராஜன், முதல் நிலை காவலர் சுரேஷ் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. அதேபோல், ராதாபுரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பெண் தலைமை காவலர் சரவணாதேவிக்கு பாராட்டு மற்றும நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: தனிநபர் புகைப்படம் பதிவேற்றம்.. 3 ஆண்டு ஜெயில்: போலீஸ் எச்சரிக்கை
இவர், 2019ஆம் ஆண்டு தந்தையே மகனை கொலை செய்த வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் விரைவாக ஆஜர் படுத்தி எதிரிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1000 அபராதமும் பெற்றுக் கொடுத்து துரித நடவடிக்கை எடுத்தவர் ஆவார்.
பணகுடி, ராதாபுரம் காவலர்களுக்கு பாராட்டு, நற்சான்றிதழ் வழங்கியபோது, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன் ஐ.பி.எஸ் மற்றும் சக காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.
வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz
ட்விட்டர் https://x.com/DravidanTimes
இன்ஸ்டாகிராம் https://www.instagram.com/dravidantimes/
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com