24 வயது மனைவியை சரமாரிய வெட்டிக் கொன்ற கூலித் தொழிலாளி.. நடந்தது என்ன?

Wife Killed in Tirunelveli Bus Stand: திருநெல்வேலியில் 24 வயது மனைவியை சந்தேகம் காரணமாக கூலித் தொழிலாளி வெட்டி படுகொலை செய்துள்ளார்.

Published on: March 16, 2026 at 3:51 pm

Updated on: March 16, 2026 at 3:53 pm

திருநெல்வேலி, மார்ச் 16, 2026: திருநெல்வேலி நகரின் மையப்பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில், பாளமடை கிராமத்தைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளி சுதாகர் (29), தனது 24 வயது மனைவி பேச்சியம்மாளை திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் வைத்து அரிவாளால் வெட்டிக் கொன்றார். இந்த நிலையில், சுதாகர் தானாகவே ஜங்ஷன் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இந்தத் தம்பதியினர் குடும்ப தகராறால் சில மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர் எனக் கூறப்படுகிறது.

என்ன நடந்தது?

சுதாகர் தனது மனைவிக்கு வெளிப்புற உறவுகள் உள்ளன என சந்தேகித்ததாக போலீசார் தெரிவித்தனர். குடும்ப சூழ்நிலை காரணமாக பேச்சியம்மாள், ஒரு துணி விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15, 2026) காலை 10.15 மணியளவில், வேலைக்கு சென்றக்கு பேச்சியம்மாளை பின்தொடர்ந்து பேருந்து நிலையத்தில் தடுத்துள்ளார் சுதாகர்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பேச்சியம்மாளை சுதாகர் வெட்டிக் கொன்றுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் போலீஸ் என்கவுன்ட்டர்.. பிரபல ரவுடி கணேஷ் மரணம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com