தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான்; சட்டப்பேரவையில் மு.க ஸ்டாலின் உறுதி!

MK Stalin: தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கைதான்; மும்மொழிக் கொள்கையை எந்த காலத்திலும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என உறுதிபட தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

Published on: March 25, 2025 at 2:24 pm

சென்னை மார்ச் 25 2025: தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று (மார்ச் 25 2025) தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றினார். அப்போது, “பணமே வேண்டாம் தாய்மொழி காப்போம்” என்றார். தொடர்ந்து, மும்மொழி குறித்து பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், ” இன மானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெறும் அடிமைகள் நாங்கள் அல்ல” என்றார். மேலும், “இது பண பிரச்சனை அல்ல இன பிரச்சினை” என்றார்.

‘தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கைதான்’; மு.க ஸ்டாலின்

இதற்கிடையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரு மொழிக் கொள்கை குறித்தும் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டும்தான் கடைப்பிடிக்கப்படும் என்றார்.
இதுகுறித்து பேசிய மு க ஸ்டாலின், ” மும்மொழிக் கொள்கையில் எந்த காலத்திலும் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்; தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரு மொழிக் கொள்கைதான். நமது வழி, விழி கொள்கையும் வெளிக் கொள்கையும் இது தான்” என்றார்.

இதையும் படிங்க : தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு.. டெல்லி சென்றார் எடப்பாடி பழனிச்சாமி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com