‘ கடற்கரையை கல்லறையாக பார்ப்பது திராவிடம்’: சீமான்

Seeman | கடற்கரையை கல்லறையாக பார்த்தால் அது திராவிடம்; கொலை செய்பவனும், செத்து விழுகிறவனும் எப்படி ஒன்றாக முடியும்? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

Published on: November 11, 2024 at 3:28 pm

Seeman | நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” பெண்களுக்கு உரிமை கல்விக் கொடுத்தது தமிழ் தேசியம்; கடந்த காலங்களில் திராவிடம் என்றால் இனம் மொழி என பேசினார்கள். அவர்கள் சொன்ன இனம் மொழி எங்கே இருக்கிறது என நாங்கள் கேட்டபோது அவர்களிடம் பதில் இல்லை.

தற்போது தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்றுதான் என கூறுகிறார்கள். அது எப்படி கொலை செய்கிறவனும்; செத்து விழுகுறவனும் ஒன்றாக முடியும். ஓர் இழப்பு என்றால் அதற்கு உண்மையாக அழுவது தமிழ் தேசியம்; ஆனால் திராவிடம் அப்படி அல்ல. உதாரணமாக கடற்கரையை கடற்கரையாக பார்த்தால் அது தமிழ் தேசியம்; கல்லறையாக பார்ப்பது தான் திராவிடம். ஒருபோதும் தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்றாக முடியாது” என்றார்.

இதையும் படிங்க 5960 ஆசிரியர்களுக்கு பணி ஆணைகளை வழங்குங்கள்: மருத்துவர் ராமதாஸ்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com