சவுக்கு சங்கர் வழக்கு: ஒரு பேட்டிக்கு 15 எஃப்.ஐ.ஆர் பதிவு? தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

Savukku Shankar case | ஒரு நோ்காணலுக்கு 15 எஃப்.ஐ.ஆர் போடப்பட்டதா? என சவுக்கு சங்கர் வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.

Published on: August 30, 2024 at 3:48 pm

Updated on: August 30, 2024 at 3:56 pm

Savukku Shankar case | பிரபல யூ-ட்யூபர் சவுக்கு சங்கருக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
அதில், “ஒரே நேர்காணலுக்காக 15 எஃப்.ஐ.ஆர்.களும் போடப்பட்டதா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இந்திய தலைமை நீதிபதி டி.ஒய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

15 எஃப்.ஐ.ஆர் பதிவு

அப்போது, “சவுக்கு சங்கர் வெளியே வந்தவுடன், ஒரு தடுப்புக்காவல் உத்தரவை பிறப்பிக்கும் மாநில அரசின் நடவடிக்கை குறித்தும் சந்திரசூட் கேள்வி எழுப்பினார்.
அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி மற்றும் சித்தார்த் லுத்ரா ஆகியோர், 15 எஃப்ஐஆர்களை ஆராய்ந்து செப்டம்பர் 2ம் தேதிக்குள் பதிலளிக்க ஒப்புக்கொண்டனர்.

சவுக்கு சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சீனிவாசன், “காவல் என்ற பெயரில் சவுக்கு சங்கர் துன்புறுத்தப்படுகிறார்” என்ற வாதத்தை முன்வைத்தார். மேலும், “சவுக்கு சங்கர் தனது பேச்சு உரிமையை பயன்படுத்தினார்” என்றும் கூறினார்.

இதையும் படிங்க : கொல்கத்தா டாக்டர் கொலை; இரவு 11.45க்கு எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டது ஏன்? உச்ச நீதிமன்றம்

இந்த வழக்கில் முன்னதாக ஆகஸ்ட் 23 அன்று, நீதிபதி ஐபி பார்திவாலா, பெஞ்சில், யூடியூபரை அரசு குறிவைக்கிறதா என்று கேட்டிருந்தார். “ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள்? அந்த மனிதரை வெளியே வந்த உடனேயே சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் ஏன் நிறுத்துகிறீர்கள்” என வினவி இருந்தார்.

சவுக்கு சங்கர் தாயார் மனு

சவுக்கு சங்கர், மே மாதம் முதல் தமிழ்நாடு குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் உள்ளார். இந்த நிலையில், ஆகஸ்ட் 9 ஆம் தேதியன்று விரிவான தீர்ப்பில் சவுக்கு சங்கருக்கு எதிரான காவலில் வைக்கப்பட்ட அரசின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
மூன்று நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 12 அன்று, குண்டர் சட்டத்தின் கீழ் இரண்டாவது தடுப்புக்காவலை அரசு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் ஏ. கமலா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஏ. கமலா சார்பாக வழக்கறிஞர் சீனிவாசன் தாக்கல் செய்துள்ள மனுவில், “சவுக்கு சங்கரை சென்னையில் இருந்து மதுரைக்கு மாற்றிவிட்டார்கள். அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் ஜே.கே
புதுடெல்லி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com