RMC Chennai | தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
January 11, 2025
RMC Chennai | தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on: October 30, 2024 at 9:56 am
RMC Chennai | தென்தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் ஒருசில இடங்களிலும் மழை பெய்துள்ளது.
வானிலை முன்னறிவிப்பு
30.10.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
31.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,
இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
01.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,
இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
02.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி. கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
03.11.2024 மற்றும் 04.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
29.10.2024: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
30.10.2024: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
31.10.2024 (தீபாவளி தினம்): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27″ செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க பசியில் காத்திருக்கும் பறவைகள்; மறைந்திருக்கும் 4 கிவி பழங்கள்: சரியா கண்டுபிடிச்சா நீங்க தான் கில்லி!
கன்னோஜ் ரயில் நிலைய விபத்து | உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் ரயில் நிலையத்தின் கட்டுமானத்தில் இருந்த கூரை ஸ்லாப் இடிந்து விழுந்ததில் குறைந்தது 20 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
சனிக்கிழமை பிற்பகல் 2:39 மணியளவில் ஷட்டர் செயலிழந்ததால் அழகுபடுத்தும் பணியின் போது கட்டுமானத்தில் இருந்த ஒரு லிண்டல் இடிந்து விழுந்தது.
இதில் குறைந்தது ஆறு தொழிலாளர்கள் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும், இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையில், தொழிலாளர்களைப் பாதுகாப்பாகக் கொண்டு வரும் நம்பிக்கையில் உள்ளூர் நிர்வாகம் ஒரு பெரிய மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் அரசு ரயில்வே காவல்துறை ஆகியோரும் சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
எஸ்.பி.ஐ வங்கி நேர்காணல்: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி சிறப்புப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகளுக்கான நேர்காணல் சுற்றுக்கான அட்மிட் கார்டுகளை வெளியிட்டுள்ளது. நேர்காணல் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த நுழைவு சீட்டை எஸ்.பி.ஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
நுழைவுச் சீட்டு ஜனவரி 31, 2025 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும். இதற்கிடையில், துணை மேலாளர் பதவிக்கான நேர்காணல் ஜனவரி 17 ஆம் தேதியும், உதவி மேலாளர் பதவிக்கான நேர்காணல் ஜனவரி 20, 2025 அன்றும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்மிட் கார்டை டவுன்லோடு செய்வது எப்படி?
பணிக்கு தேர்வு செய்யப்படுவது எப்படி?
இந்த கலந்துரையாடலுக்கு 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். கலந்துரையாடலுக்கான தகுதி மதிப்பெண்களை வங்கியே முடிவு செய்யும். இது தொடர்பாக எந்த கடிதப் போக்குவரத்தும் ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும் ஒவ்வொரு பதவிக்கும் எத்தனை அடுக்குகள் நேர்காணல் என்பதையும் வங்கியே முடிவு செய்யும். அதன் பின்னர் மெரிட் முறையில் மதிப்பெண்கள் வெளியிடப்படும். தொடர்ந்து, வெயிட்டேஜ் முறையில் முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
பத்தனம்திட்டா சிறுமி பாலியல் வன்கொடுமை: கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 60க்கும் மேற்பட்டவர்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக 18 வயதான பட்டியலின சிறுமி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். குழந்தைகள் நலக் குழு உறுப்பினர்களிடம் அவர் தனக்கு நேர்ந்த இந்த கொடுமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து அவர்கள் காவல் துறைக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, சிறுமி கூறியது போல், ஆரம்ப விசாரணையில் 60க்கும் மேற்பட்டோர் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள இரண்டு காவல் நிலையங்களில் 5 எஃப்.ஐ.ஆர்.கள் பதியப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் சுபின் (24), எஸ். சந்தீப் (30), வி.கே. வினீத் (30), கே. ஆனந்த் (21), மற்றும் ஸ்ரீனி என்கிற எஸ். சுதி ஸ்ரீனி (24) எனப் பட்டியல் நீள்கிறது. இவர்கள் அனைவரும் பத்தனம்திட்டாவில் உள்ள சென்னீர்கராவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். கைது செய்யப்பட்டவர்களின் மொபைல் போன்களில் உள்ள புகைப்படங்களிலிருந்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் இந்த விவகாரத்தில் சனிக்கிழமை (ஜன.11, 2025) மேலும் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, தடகள வீராங்கனையான அந்தப் பெண் 13 வயதாக இருந்தபோது, அவரது தந்தையின் நண்பரான சுபின் என்பவரின் மகன ஸ்மார்ட்போனை காண்பித்து அவரை வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அந்தப் பெண்ணின் நிர்வாணப் படங்களையும் தனது தொலைபேசியில் படம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், சிறுமிக்கு 16 வயதாக இருந்தபோது, சுபின் அவளை அவர்கள் பகுதியில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார். இதனை வீடியோவாக தனது தொலைபேசியில் பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து அவர் 60க்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் எனப் போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், சுபினின் நண்பர்கள் மத்தியில் இந்தக் காட்சிகள் பகிரப்பட்டதாகவும், அவர்களும் அவளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் தெரியவந்துள்ளது. தொடர்ச்சியான துஷ்பிரயோகத்திற்குப் பிறகு கல்வித் திறன் பாதிக்கப்பட்ட சிறுமி, ஒரு ஆலோசனை அமர்வின் போது பெண்கள் அதிகாரமளிப்பு கூட்டு முன் இந்த விஷயத்தை முதலில் வெளிப்படுத்தினார். சிறுமி தனது பயிற்சியாளர்கள், சக விளையாட்டு வீரர்கள் மற்றும் வகுப்பு தோழர்கள் உள்ளிட்ட நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகாரில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
பாலா டைரக்ஷனில் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள வணங்கான் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் காட்சிகள் அழுத்தமாக உள்ளன என்றும் படத்தை பார்த்தவர்கள் கூறிவருகின்றனர். மேலும் ட்விட்டர் வாசிகள் தங்களின் விமர்சனத்தில் பாலா சமூகத்தின் மீதுள்ள கோபத்தை பெண்களுக்கு எதிரான குற்றங்களை பெல்ட்டால் அடித்தது போல் அழுத்தம் திருத்தமாக பேசியுள்ளார் எனக் கூறியுள்ளனர்.
இந்தப் படத்தில் முதலில் சூர்யா நடிக்கவிருந்தார். இந்த நிலையில் அவர் படத்தில் இருந்து விலகினார் பின்னர்தான் படத்திற்குள் அருண் விஜய் வந்தார். படத்தில் அவர் நடிப்பில் பிச்சு உதறியுள்ளார் என பல்வேறு தரப்பட்ட ரசிகர்களும் கூறுகின்றனர். படம் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடப்பது போல் உள்ளது. பல்வேறு காட்சிகள் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் இந்தப் படம் அருண் விஜய்க்கு மற்றுமொரு கம்பேக் எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர். படத்தில் வசூல் வரும் நாள்களில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகியது குறித்து ரசிகர்கள் சிலர் நல்ல வேளை அவர் எஸ்கேப் ஆகிவிட்டார் என்றும் கூறுகின்றனர். அதாவது படம் பாலாவுக்கு கம்பேக் இல்லை; மாறாக சூர்யா கிரேட் எஸ்கேப் எனக் கூறுகின்றனர்.
எனினும், இந்தப் படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அருண் விஜய் மற்றும் பாலாவுக்கு நல்ல பெயரை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
செஸ் நட்சத்திரம் குகேஷ் 2024 வருமானம்: சிங்கப்பூரில் நடந்த உலக சதுரங்க சாம்பியன்ஷிப்பில் டிங் லிரெனை வீழ்த்திய பிறகு சதுரங்க வரலாற்றில் இதுவரை இல்லாத புகழின் உச்சத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் உள்ளார். இந்நிலையில், குகேஷுக்கு கேல் ரத்னா விருதுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற அவருக்கு பரிசுத் தொகையைப் பொறுத்தவரை, 15,77,842 அமெரிக்க டாலர்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தொகையில் குகேஷ் தமிழக அரசிடமிருந்து பெற்ற தொகை சேர்க்கப்படவில்லை. அதாவது, உலக சாம்பியன்ஷிப்பை வென்றதற்காக, குகேஷ்க்கு 5 கோடி ரூபாய் வழங்குவதாக தமிழக அரசு முன்பு அறிவித்திருந்தது.
குகேஷ் கேண்டிடேட்ஸ் போட்டியில் வென்ற பிறகு, அவரது பள்ளியான வேலம்மாள் வித்யாலயா, அவருக்கு மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸையும் பரிசளித்தது. இதில் சில முக்கிய விஷயங்களை நாம் நினைவு கூர வேண்டும். 2024 ஆம் ஆண்டில் குகேஷ் 8 முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றார். இந்நிலையில், டிங் லிரென் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதில், 11,83,600 அமெரிக்க டாலர்கள் சம்பாதித்துள்ளார்.
இதற்கிடையில், செஸ் டாம் அறிக்கையின் படி, 2024 ஆம் ஆண்டில் இரண்டு வீரர்கள் மட்டுமே ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேல் வென்றனர், அதே நேரத்தில் ஆறு வீரர்கள் 4,00,000 அமெரிக்க டாலர்களை சம்பாதித்துள்ளனர். இந்தப் பட்டியலில் ஆர். பிரக்ஞானந்தா 2,02,136 அமெரிக்க டாலர்கள் சம்பாதித்து பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளார், அதே நேரத்தில் அர்ஜுன் எரிகைசி 1,19,767 அமெரிக்க டாலர்கள் சம்பாதித்து 15வது இடத்தில் உள்ளார்.
மேக்னஸ் கார்ல்சன் 6,33,369 அமெரிக்க டாலர்கள் சம்பாதித்து பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். கார்ல்சன் 11 முக்கிய போட்டிகளில் பங்கேற்றார். அந்த வகையில், 2024 ஆம் ஆண்டில் பரிசுத் தொகையிலிருந்து மட்டும் குகேஷ் ரூ. 13.6 கோடி சம்பாதித்துள்ளார். இது அமெரிக்க ஜனாதிபதியின் ஆண்டு சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com