RMC Chennai | தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
RMC Chennai | தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Published on: October 30, 2024 at 9:56 am
RMC Chennai | தென்தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் ஒருசில இடங்களிலும் மழை பெய்துள்ளது.
வானிலை முன்னறிவிப்பு
30.10.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
31.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,
இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
01.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,
இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
02.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி. கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
03.11.2024 மற்றும் 04.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
29.10.2024: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
30.10.2024: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
31.10.2024 (தீபாவளி தினம்): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27″ செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க பசியில் காத்திருக்கும் பறவைகள்; மறைந்திருக்கும் 4 கிவி பழங்கள்: சரியா கண்டுபிடிச்சா நீங்க தான் கில்லி!

சென்னை, மே 27, 2026: பாட்டாளி மக்கள் கட்சி தலைமை நிலையம் சார்பில் இன்று வெளியாகியுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னையில் நேற்று (26.05.2026) செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.
இதில், கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், கட்சி வளர்ச்சிப் பணிகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், கிளை, பேரூர், நகர, ஒன்றிய, மாவட்ட அளவில் கட்சி நிர்வாகத்தை மறு சீரமைக்க இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் குழுக்களை அனுப்பி ஆய்வு செய்வதென்றும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரின் கருத்துகளைக் கேட்டறிந்து, அதனடிப்படையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து கட்சித் தலைமைக்கு குழுக்கள் அறிக்கை தாக்கல் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
குழுக்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் உரிய மாற்றங்களை கட்சித் தலைவர் மேற்கொள்வார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஈகை உணர்வால் வாகை சூடுவோம்.. வைகோ பக்ரீத் வாழ்த்து
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

சென்னை, மே 27, 2026: பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் விஜய் இன்று (புதன்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சர் தான் இருக்க வேண்டும் என்ற முந்தைய திமுக அரசின் நிலைப்பாட்டை இப்போதுள்ள த.வெ.க. அரசும் ஏற்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை; இந்த விவகாரத்தில் முதலமைச்சர் இறுதி முடிவு எடுப்பார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கலாம் என்று தமிழக சட்டப்பேரவையில் முந்தைய திமுக ஆட்சியின் வெவ்வேறு காலகட்டங்களில் 10 சட்ட முன்வரைவுகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், அந்த 10 சட்ட முன்வரைவுகளுக்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்காமலும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியும் தாமதப்படுத்தி வந்த நிலையில், அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கும்படி ஆளுனருக்கு ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக அரசு வழக்குத் தொடர்ந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, “அதை விசாரித்த உச்சநீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டத்தின் 142-ஆம் பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சரை நியமிக்கும் சட்ட முன்வரைவுகளுக்கு ஒப்புதல் அளித்து விட்டது. அதன்படி இன்றைய சூழலில் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தர் முதலமைச்சர் தான். இதில் எந்த ஐயமும் இல்லை.
அந்த சட்டங்களை செல்லாது என்று அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை முழுமையாக விசாரிக்காத சென்னை உயர்நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு , அந்த சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது. அதையும் செல்லாது என தீர்ப்பளித்து விட்ட உச்சநீதிமன்றம், அந்த வழக்கை 6 வாரங்களில் விசாரித்து தீர்ப்பளிக்கும்படி ஆணையிட்டுள்ளது. இத்தகைய சூழலில், தமிழக அரசு செய்ய வேண்டியதெல்லாம் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடித்து நடைமுறைக்கு கொண்டு வருவது தான். அதன் மூலம் தான் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை விரைவாக நியமிக்க முடியும்.
மாறாக, தமிழக அரசு சட்டங்களின் வாயிலாகவும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலமும் உறுதி செய்யப்பட்ட தமிழ்நாட்டு அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தர் முதலமைச்சர் தான் என்ற நிலைப்பாட்டை மாற்ற புதிய அரசு எந்த முயற்சியும் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் அது மாநில அரசின் உரிமைகளை தாரை வார்த்ததாக அமைந்து விடும்” எனவும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : ‘மயக்க பிஸ்கெட்டு’களை மக்களுக்குத் தந்தால், பிரச்சினைகள் தீருமா? கி. வீரமணி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

சென்னை, மே 27, 2026: ஐ.பி.எல் 2026 இல் 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அபார வாணவேடிக்கை ஆட்டத்தால் போட்டியின் முக்கிய முகமாக மாறியுள்ளார். இவர், 568 ரன்கள் (ஸ்ட்ரைக் ரேட் 232) அடித்து, ஆரஞ்சு தொப்பியுடன் போட்டியில் முன்னிலை வகிக்கிறார்.
முன்னதாக, ஜெய்ப்பூரில் ஹைதராபாத் அணிக்கு எதிராக அவர் அடித்த 36 பந்துகளில் சதம், ஐ.பி.எல் வரலாற்றில் மூன்றாவது வேகமான சதமாகும். இந்த ஆட்டம் ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸின் மனதில் இன்னும் பதிந்துள்ளது.
அதாவது, ஜெய்ப்பூரில், சூர்யவன்ஷி முதல் ஓவரிலேயே நான்கு சிக்ஸர்கள் அடித்து பழிவாங்கினார். முந்தைய ஆட்டத்தில், ப்ரஃபுல் ஹிஞ்சே அவரை ‘டக்’ ஆக அவுட் செய்திருந்தார். இந்நிலையில் சூர்யவன்ஷி 15 பந்துகளில் அரைசதம், 36 பந்துகளில் சதம் அடித்து ஹைதராபாத் பந்துவீச்சாளர்களை சிதறடித்தார்.
இதற்கிடையில், கம்மின்ஸ், “சூர்யவன்ஷி போன்ற வீரர்களுக்கு எதிராக பிளான் பி, பிளான் சி தேவை” என்று ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்து பேசிய அவர், “சில நேரங்களில் நாங்கள் அவரை கட்டுப்படுத்தினோம், சில நேரங்களில் அவர் தப்பித்தார். அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறோம்” என்றார்.
மேலும், ஹைதராபாத், எலிமினேட்டர் போட்டியில் அவரை கட்டுப்படுத்த புதிய தந்திரங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஹைதராபாத் வெற்றி
அந்தப் போட்டியில் சூர்யவன்ஷி சதம் அடித்தாலும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அந்த ஜெய்ப்பூர் போட்டியில் 229 ரன்களை 18.3 ஓவர்களில் துரத்தி வென்றது. அபிஷேக் சர்மா மற்றும் ஈஷான் கிஷன் ஆகியோரின் அரைசதங்கள் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வெற்றியைத் தந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : புதிய உச்சம் தொட்ட விராத்கோலி.. டெஸ்ட்டை முந்திய ஐபிஎல் ரன்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

சென்னை, மே 27, 2026: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று (புதன்கிழமை) விடுத்துள்ள பக்ரீத் வாழ்த்துச் செய்தியில், “ஈதுல் அல்ஹா என்னும் ஈகைத் திருநாளாம் தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகையாக இன்று உலகெங்கும் உவப்புடன் கொண்டாடப்படுகின்றது.
மூன்று முறை கனவில் கண்டதையே இறைவனின் கட்டளை என்று கருதி, தள்ளாத வயதில் தான் பெற்றெடுத்த ஒரே பிள்ளை என்றும் பாராமல் இஸ்மாயிலை, நபி இப்ராகீம் (அலை) பலியிட முன்வந்த தியாகம் இன்றளவும் உலகெங்கும் நினைவுகூரப்படுகின்றது. இஸ்லாமிய வரலாற்றின் திருப்புமுனையாக நடைபெற்றது இந்த நிகழ்வு.
நிறம், சாதி, மொழி, இனம், தேசம் என்ற வரம்புகளைத் தகர்த்து, ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்ற உணர்வுடன், அரபா பெருவழியில் மானுட சமுத்திரமாக மக்கள் சங்கமித்து, வழக்க வழிபாடுகளில் திளைத்திருக்கும் மகோன்னதம் இன்று அரங்கேறுகிறது; ஈகை உணர்வால், வையகத்தை அய்யமின்றி வாகை சூடலாம் என்று அறிவிக்கின்றது.
தமிழ்நாட்டில் காலங்காலமாக உறவுமுறை கூறி, உணர்வுபூர்வமாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் முஸ்லிம் பெருமக்கள், இந்நாளில் சகோதர சமயத்தாருடன் விருந்துண்டு மகிழ்ந்து, சமய நல்லிணக்கத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வலுச் சேர்க்க வாய்த்திட்ட இந்நாள் ஒரு பொன்னாள் ஆகும்.
இந்த உணர்வையும், உறவையும் மேலும் செழித்தோங்கச் செய்யச் சூளுரைத்து, இஸ்லாமியப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் இதய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும்.. மருத்துவர் ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

சென்னை, மே 27, 2026 : பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு என்பது ஒரு சாதாரண அரசியல் திட்டமல்ல; அது சமூகநீதி, சமத்துவம், பின்தங்கிய மக்களின் உரிமை மற்றும் தமிழ்நாட்டின் சமூக அமைப்பின் பிரதிபலிப்பாகும். இந்த இடஒதுக்கீடு முறையை எந்த காரணத்திற்காகவும் பலவீனப்படுத்தவோ, குறைக்கவோ அல்லது நீதிமன்ற வழிகளில் பாதிக்கவோ அனுமதிக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஆகியோரின் மொத்த மக்கள் தொகை 85 முதல் 90 சதவீதம் வரை இருப்பதாக பல்வேறு ஆணையங்கள் மற்றும் சமூக ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
அந்த அடிப்படையில் அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்காகவே 69% இடஒதுக்கீடு உருவாக்கப்பட்டு சட்டரீதியாக நடைமுறைப்படுத்தப்பட்டது” என்று சுட்டிக் காட்டியுள்ள மருத்துவர் ராமதாஸ், “இந்த இடஒதுக்கீடு தொடர்பாக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அளித்த கணக்கிடத்தக்க தரவுகள், சமூக மற்றும் கல்வி ரீதியான பின்தங்கிய நிலைமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் சமூகநீதிக்கும் இணையானவை ஆகும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : ‘மயக்க பிஸ்கெட்டு’களை மக்களுக்குத் தந்தால், பிரச்சினைகள் தீருமா? கி. வீரமணி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com