RMC Chennai | தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
RMC Chennai | தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Published on: October 30, 2024 at 9:56 am
RMC Chennai | தென்தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் ஒருசில இடங்களிலும் மழை பெய்துள்ளது.
வானிலை முன்னறிவிப்பு
30.10.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
31.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,
இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
01.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,
இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
02.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி. கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
03.11.2024 மற்றும் 04.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
29.10.2024: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
30.10.2024: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
31.10.2024 (தீபாவளி தினம்): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27″ செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க பசியில் காத்திருக்கும் பறவைகள்; மறைந்திருக்கும் 4 கிவி பழங்கள்: சரியா கண்டுபிடிச்சா நீங்க தான் கில்லி!

புதுடெல்லி மார்ச் 15, 2026; இந்திய தேர்தல் ஆணையம் நான்கு மாநிலங்களுக்கும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கும் (புதுச்சேரி) தேர்தல் அட்டவணையை அறிவித்துள்ளது; இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளம் உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் நடைபெறும் தேதியை பார்க்கலாம்.
| வரிசை எண் | மாநிலம் | தேர்தல் தேதி |
|---|---|---|
| 1 | மேற்கு வங்காளம் | ஏப்ரல் 23 மற்றும் 29 |
| 2 | தமிழ்நாடு | ஏப்ரல் 23 |
| 3 | கேரளா | ஏப்ரல் 9 |
| 4 | அசாம் | ஏப்ரல் 9 |
| 5 | புதுச்சேரி | ஏப்ரல் 9 |
தேர்தல் தேதி
கேரளம், அசாம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 9 அன்று நடைபெறும். தமிழ்நாடு ஒரே கட்டமாக ஏப்ரல் 23 அன்று வாக்களிக்கும். மேற்கு வங்காளத்தில் தேர்தல் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 23 மற்றும் 29 அன்று நடைபெறும். நான்கு மாநிலங்களிலும் புதுச்சேரியிலும் வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று நடைபெறும்.
இந்த சட்டமன்றங்களின் காலம் மே மற்றும் ஜூன் மாதங்களில் முடிவடைகிறது.
செய்தியாளர் சந்திப்பு
தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் அவரை பதவியிலிருந்து நீக்க முனைந்துள்ள அறிவிப்பைச் சார்ந்த கேள்விகளைத் தவிர்த்தார். நான்கு மாநிலங்களுக்கும் ஒரு யூனியன் பிரதேசத்திற்குமான சட்டமன்ற தேர்தல் அட்டவணையை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அவர் அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை.
முதன்மை தேர்தல் ஆணையரை (CEC) நீக்குவது பாராளுமன்றத்தின் அதிகாரத்தில் மட்டுமே உள்ளது. ஆனால், தேர்தல் ஆணையாளர்களை, முதன்மை தேர்தல் ஆணையர் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்வதன் மூலம் நீக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; புதிய முகங்களுக்கு வாய்ப்பு.. 9 எம்எல்ஏக்கள் கல்தா.. உச்சகட்ட பரபரப்பில் கேரளம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

புதுடெல்லி, மார்ச் 15 2026; நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய், 2025 செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி அன்று கரூரில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார்; இந்தப் பொதுக்கூட்டத்தில் எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் என 41 பேர் தங்களின் இன்னுயிரை இழந்தார்கள்; மேலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இதில் காயம் அடைந்தார்கள்.
இந்த வழக்கு தொடர்பாக மத்திய புலனாய்வு குழு (சிபிஐ), வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது; இந்த வழக்கு தொடர்பாக புதுடெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் ஏற்கனவே ஜனவரி மாதம் இருமுறை ஆஜராகி உள்ளார்.
அப்போது சிபிஐ தரப்பில் வெளியான அறிக்கையில், நடிகர் விஜய்யிடம் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சில கேள்விகள் கேட்கப்பட்டன; அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த தேவை ஏற்பட்டால் அதன் பெயரில் நோட்டீஸ் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிபிஐ தரப்பில் நடிகர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் புதுடெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் மார்ச் 15ஆம் தேதி நடிகர் விஜய் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
நடிகர் விஜய் ஆஜர்
இதைத்தொடர்ந்து பொது டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவர் ஆன விஜய் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆஜரானார். அவரிடம் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்த தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையின் போது, விஜய் இடம் கேட்கப்பட்ட கேள்விகள் என்னென்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
யாருடன் கூட்டணி?
தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது; அதன்படி தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல், வருகிற ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே மாதம் நான்காம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் காங்கிரஸும் அதிமுக கூட்டணியில் பாஜகவும் அங்கம் வகிக்கின்றன. நாம் தமிழர் தனித்துப் போட்டி என்று அறிவித்துள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டை விஜய் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க; தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு.. காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அதிருப்தி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

சென்னை மார்ச் 15, 2026; இஸ்லாமியர்களின் உரிமைக்கு குரல் கொடுக்கும் கட்சி திமுக என அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் திமுக தலைவர், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், ” திமுகவுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே இருக்கும் உறவு தலைமுறை கடந்தது; நம்மை யாராலும் பிரிக்க முடியாது” என்றார்.
மேலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளும் கட்சியாக இருந்தாலும் இஸ்லாமியர்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கம் திமுக எனவும் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். தொடர்ந்து திமுகவின் பலமே பெண்கள் தான் எனக் கூறிய மு.க ஸ்டாலின், மகளிர் மையப்படுத்திய திட்டங்களை தீட்டி வருகிறோம் எனவும் தெரிவித்தார்.
தேர்தல் விதிகள் அமல்
தமிழ்நாட்டில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளன; ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் நான்காம் தேதி நடைபெறுகிறது. திமுகவை பொருத்தமட்டில், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. பாஜக, அன்புமணி ராமதாஸின் பாமக, டிடிவி தினகரனின் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக தேர்தலை எதிர்கொள்கிறது.
வழக்கம்போல் நாம் தமிழர் தனித்துப் போட்டி என்று அறிவித்துள்ள நிலையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் நிலை குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை; அந்தக் கட்சி, 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது. எனினும் கூட்டணி தொடர்பான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க;தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி.. சற்று நேரத்தில் முழு அட்டவணை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

சென்னை மார்ச் 15, 2026;தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டன. இது தொடர்பாக தனது அதிருப்தியை கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வெளிப்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக, ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில் ஜோதிமணி எம்பி, “பொதுவாக தமிழ்நாடு ,கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே நாளில் தான் தேர்தல் நடப்பது வழக்கம். இந்தமுறை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இரண்டு வாரங்களுக்குப் பிறகு நடக்கிறது. இதற்கான காரணத்தை அறிந்துகொள்வது ஒன்றும் கஷ்டமில்லை” என தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் மீது விமர்சனம்
தொடர்ந்து ஜோதிமணி எம்பி, “பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்பது தேர்தல் தேதியிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது. எல்லாவற்றையும் எதிர்கொள்கிற அறிவும் ,அரசியல் புரிதலும் தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு. இந்தியா கூட்டணிக்கும் உண்டு” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க; காவலர்களே காயப்படுத்தினால் பெண்கள் பாதுகாப்பு எப்படிச் சாத்தியம்? டிடிவி தினகரன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

திருவனந்தபுரம் மார்ச் 15, 2026; கேரள லாட்டரியின் சம்ருதி எஸ்.எம்- 46, குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு மேல் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டன; இதில் முதல் பரிசு ₹1 கோடி ஆகும்.
இது தவிர பல்வேறு ரொக்க பரிசுகளும் அறிவிக்கப்பட்டன; இதற்கான குலுக்கள், மாலை 3 மணிக்கு மேல் திருவனந்தபுரம் பேக்கரி ஜங்ஷன் அருகிலுள்ள கோர்க்கி லாட்டரி பவனில் நடைபெற்றது.
இதில் முதல் பரிசு ₹1 கோடி, MV 216603 என்ற லாட்டரி சீட்டுக்கு விழுந்தது.
இரண்டாம் பரிசு ரூபாய் 25 லட்சம் பெற்ற அதிர்ஷ்ட எண் MR 806466
மூன்றாம் பரிசு ரூபாய் 5 லட்சம் என்று அதிர்ஷ்ட எண் MN 737578
அதேபோல் இரண்டாம் பரிசு ரூபாய் 25 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசு ரூபாய் 5 லட்சம் உட்பட பல்வேறு ரொக்க பரிசுகள் குறித்த அனைத்து தகவல்களும் அறிவிக்கப்பட்டன.
லாட்டரி முடிவுகளை பார்ப்பது எப்படி?
கேரள லாட்டரியின் முடிவுகளைப் பார்க்க www.keralalottery.info என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்வையிடவும். மேலும், கேரள அரசு அரசிதழ் அலுவலகத்திலும் நீங்கள் வெற்றி எண்களை நேரில் சரிபார்க்கலாம்.
பரிசுத் தொகை எப்படி கிடைக்கும்?
லாட்டரி பங்கேற்பாளர்கள் தங்களிடம் உள்ள லாட்டரி டிக்கெட் எண்களை கேரள அரசு அரசிதழில் வெளியிடப்பட்ட வெற்றி எண்களுடன் சரிபார்த்துக் கொள்ளலாம். இதில், அவர்களின் எண் பொருந்தினால், அவர்கள் அந்தந்த பரிசுத் தொகையைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
பரிசு பெற என்னென் ஆவணங்கள் தேவை
(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது)
இதையும் படிங்க : ஐ டி அலுவலகம் அனுப்பிய தவறான தகவல்கள்.. வரி செலுத்தும் நபர்கள் ஷாக்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com