RMC Chennai | தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
RMC Chennai | தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Published on: October 30, 2024 at 9:56 am
RMC Chennai | தென்தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் ஒருசில இடங்களிலும் மழை பெய்துள்ளது.
வானிலை முன்னறிவிப்பு
30.10.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
31.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,
இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
01.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,
இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
02.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி. கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
03.11.2024 மற்றும் 04.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
29.10.2024: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
30.10.2024: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
31.10.2024 (தீபாவளி தினம்): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27″ செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க பசியில் காத்திருக்கும் பறவைகள்; மறைந்திருக்கும் 4 கிவி பழங்கள்: சரியா கண்டுபிடிச்சா நீங்க தான் கில்லி!
நாட்டின் இன்றைய முக்கிய நிகழ்வுகள், நடப்புகள் குறித்து இதில் சுருக்கமாக பார்க்கலாம். சென்னையில் (மார்ச் 28 2026) ஆபரணத் தங்கத்தின் விலை, கிராம் ரூ. 13,430 சவரன் ரூ. 107,440. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100.93 ஆகவும், டீசல் விலை ரூ.92.42 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

பெங்களூரு, மார்ச் 28, 2026: “4 டிக்கெட்டுகள் சாத்தியமில்லை, இப்போது 2 டிக்கெட்டுகள் மட்டுமே,” என்று எம்.எல்.ஏ.க்கள் ஐபிஎல் டிக்கெட்டுகளை கோரியபோது டி.கே. சிவகுமார் கூறினார். பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கையை விமர்சித்தார்.
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் வெள்ளிக்கிழமை (மார்ச் 27) ‘எம்.எல்.ஏ.க்களுக்கு நான்கு டிக்கெட்டுகள் வழங்குவது சாத்தியமில்லை, தற்போது இரண்டு இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும்.” என்றார். இந்த முடிவு, டி.கே. சிவகுமார் மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத் தலைவர் வெங்கடேஷ் பிரசாத் இடையிலான சந்திப்புக்குப் பிறகு எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக மேலும் டி.கே. சிவக்குமார், “”முன்பு ஒவ்வொரு எம்.எல்.ஏ., எம்.பி. மற்றும் அமைச்சருக்கும் ஒரு டிக்கெட் வழங்கப்பட்டது. ஆனால், குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்வதை கருத்தில் கொண்டு, அரசு இரண்டு டிக்கெட்டுகள் வழங்குமாறு ஏற்பாட்டாளர்களிடம் கோரியுள்ளது,” என்றார்.
இன்று தொடக்கப் போட்டி
மார்ச் 28 அன்று எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான தொடக்கப் போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், டிக்கெட் தொடர்பாக அடுத்த கட்ட முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க எம்.பி ஆட்சேபம்
கர்நாடக காங்கிரஸ் அரசின் இந்த முடிவுக்கு பா.ஜ.க எம்.பி ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அவர், “கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் விதான சௌதாவில் ஐபிஎல் ரசிகர்களுக்கான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றி விவாதித்திருந்தால், அது சட்டமன்றத்தின் மரியாதையை உயர்த்தியிருக்கும். ஆனால், அதற்கு பதிலாக எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இலவச டிக்கெட்டுகள் கேட்டு, மிரட்டியதும் கூட நடந்தது.
இது வெறும் தவறான முன்னுரிமை அல்ல. இது ஆழமான பிரச்சினையை வெளிப்படுத்துகிறது – பொதுப் பதவியை உரிமையாகக் கருதும் ஒரு “விஐபி மனப்பாங்கு”. ஏன் எந்தவொரு விளையாட்டு அமைப்பும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஏதாவது வழங்க வேண்டும்? ஏன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சாதாரண குடிமக்களுக்கு மறுக்கப்படும் சலுகைகளை எதிர்பார்க்க வேண்டும்? பொது பதவி என்பது ஒரு சலுகை அல்ல. அது ஒரு பொறுப்பு. இந்த கலாச்சாரம் முடிவுக்கு வர வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முதல் போட்டியில் ஹைதராபாத்- பெங்களூரு மோதல்.. ஐ.பி.எல் இரண்டாம் போட்டி அட்டவணை வெளியீடு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

புதுடெல்லி, மார்ச் 28, 2026: டெல்லி உயர்நீதிமன்றம் நடிகர் மோகன்லாலின் தனிநபர் உரிமைகளை உறுதிப்படுத்தி, அனுமதி இல்லாமல் உள்ளடக்கங்களை பதிவேற்றியவர்களின் விவரங்களை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு, பிரபலங்களின் தனிப்பட்ட உரிமைகளை பாதுகாக்கும் வகையில் முக்கியமான முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது. இதற்கிடையில், டெல்லி உயர் நீதிமன்றம், நடிகர் மோகன்லாலின் பெயர், உருவம், குரல் போன்றவை அவரின் தனிப்பட்ட உரிமைகளின் பகுதியாகும் என்று தெரிவித்துள்ளது.
நீதிபதி தீர்ப்பு
டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜோதி சிங் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை வழங்கியது. அனுமதி இல்லாமல் உள்ளடக்கங்களை பதிவேற்றிய பயனர்களின் முழுமையான விவரங்களை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தளங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், மோகன்லாலின் புகைப்படங்கள் மற்றும் பெயரை பயன்படுத்தி தயாரிப்புகள் எவ்வாறு அனுமதி இல்லாமல் இ-காமர்ஸ் தளங்களில் பட்டியலிடப்பட்டன என்பதை நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதற்கிடையில், இதற்கு பதிலளித்த அந்த இ-காமர்ஸ் தளம், அனுமதி இல்லாத பட்டியல்கள் நீக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தெறிக்கவிட்ட ரன்வீர் சிங்.. மாஸ் சம்பவம் செய்த துரந்தர்-2. ரூ.1,000 கோடி வசூல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

காத்மாண்டு, மார்ச் 28,2026: ராஷ்ட்ரிய சுவதந்திரா கட்சி (RSP) தலைவர் பாலேந்திர ஷா நேற்று நேபாளத்தின் பிரதமராக பதவியேற்றார். இந்த, பதவியேற்பு விழா மதியம் 12:34 மணிக்கு, காத்த்மாண்டுவில் உள்ள சீத்தல் நிவாஸ் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
முன்னதாக ஷா, ஆர்.எஸ்.பி பாராளுமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், நேபாளத்தின் இளம் வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக பதவியேற்கும் வாய்ப்பு கிடைத்தது. மார்ச் 5 பாராளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி ஆர்.எஸ்.பி பெரும் வெற்றியை பெற்றது.
35 வயதான ராப் பாடகர்‑இருந்து அரசியல்வாதியாக மாறிய பாலேந்திர ஷா, நாட்டின் உயர்ந்த நிர்வாகப் பதவியை வகிக்கும் முதல் மதேஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த நபராகவும் இருப்பார். முன்னாள் காத்த்மாண்டு மேயராக இருந்த பாலேந்திர ஷா, “பாலன்” என்ற பெயரில் பிரபலமானவர். கடந்த ஆண்டு நடந்த வன்முறைமிக்க ஜென் எக்ஸ் (Gen Z) போராட்டங்களுக்குப் பிறகு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அபுதாபி ட்ரோன் தாக்குதல்.. இந்தியர் உள்பட 2 பேர் மரணம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

புதுடெல்லி, மார்ச் 28, 2026: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாரதிய ஜனதா அரசு, உள்நாட்டு பயன்பாட்டிற்காக பெட்ரோல் மற்றும் டீசலுக்கு லிட்டருக்கு 10 ரூபாய் மத்திய சுங்க வரியை குறைத்துள்ளது இது தொடர்பாக, சமூக ஊடகப் பதிவில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மேற்கு ஆசியா நெருக்கடியை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இது விலையேற்றத்திலிருந்து நுகர்வோருக்கு பாதுகாப்பளிக்கும் என்றும் கூறினார்.
அவர் மேலும், டீசல் ஏற்றுமதிக்கு லிட்டருக்கு 21.5 ரூபாய், விமான டர்பைன் எரிபொருளுக்கு லிட்டருக்கு 29.5 ரூபாய் சுங்கம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் உள்நாட்டு பயன்பாட்டிற்கான போதுமான கிடைப்பை உறுதி செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் மற்றும் விலைகளில் ஏற்படும் மாற்றங்களிலிருந்து குடிமக்களை பாதுகாக்க அரசு எப்போதும் உறுதி செய்துள்ளதாக நிதி அமைச்சர் வலியுறுத்தினார். இந்நிலையில், பெட்ரோல், டீசல் சுங்க வரி குறைப்பு நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐ.பி.ஓ-வை விட 65% நிறுவனங்கள் விற்பனை விலை சரிவு.. அதிர்ச்சி தகவல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com