வளிமண்டல கீழடுக்கு சுழற்சி; வெளுத்து வாங்கப் போகும் கனமழை: 10 மாவடடங்கள் உஷார்!

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Published on: October 9, 2024 at 3:01 pm

RMC Chennai | Rain Alert | சென்னை வானிலை ஆய்வு மையத்தில் தென் மண்டல இயக்குனர் பா. செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “லட்சத்தீவு, கேரளா மற்றும் வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை இன்று (அக்.9, 2024) பெய்யவாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து, “ நாளை (அக்.10,2024), தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, விருதுநகர். சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பெய்யவாய்ப்புள்ளது” எனவும் கூறப்பட்டுள்ளது.

சென்னை வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

10.10.2024 மற்றும் 11.10.2024

கேரள கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், மாலத்தீவு பகுதிகள், தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 12.10.2024: கேரளா கடலோர பகுதிகள், மாலத்தீவு- லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை

ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க சரசரவென சரிந்த தங்கம்; இன்றைய ரேட் இதுதான்: உடனே முந்துங்க!

சென்னையில் பரிதாபம்.. கிரிக்கெட் விளையாடிய ஐ.டி ஊழியர் உயிரிழப்பு! IT Employee Dies on Field

சென்னையில் பரிதாபம்.. கிரிக்கெட் விளையாடிய ஐ.டி ஊழியர் உயிரிழப்பு!

IT Employee Dies on Field : சென்னையில் கிரிக்கெட் விளையாடிய ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது….

சென்னை மெரினாவில் மாயமான இரண்டு வயது குழந்தை.. அதிரடி காட்டிய சிங்கப் பெண் படை! Singappen Force Rescues Missing Kid

சென்னை மெரினாவில் மாயமான இரண்டு வயது குழந்தை.. அதிரடி காட்டிய சிங்கப் பெண்

Singappen Force Rescues Missing Kid : சென்னை மெரினா கடற்கரையில் காணாமல் போன இரண்டு வயது பெண் குழந்தையை சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்….

தமிழ்நாடு முழுக்க போதைப் பொருள் தடுப்பு அதிரடி நடவடிக்கை.. 202 பேர் கைது Drug trafficking arrests

தமிழ்நாடு முழுக்க போதைப் பொருள் தடுப்பு அதிரடி நடவடிக்கை.. 202 பேர் கைது

Drug trafficking arrests : தமிழ்நாடு முழுக்க போதைப் பொருள் தடுப்பு அதிரடி நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். இதுவரை 202 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்….

‘தமிழ்நாட்டின் ஒரு பகுதி மேகதாது’.. வியனரசு அதிரடி! Mekedatu resolution

‘தமிழ்நாட்டின் ஒரு பகுதி மேகதாது’.. வியனரசு அதிரடி!

Mekedatu resolution : “மேகதாது தமிழ்நாட்டின் பகுதி என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என வியனரசு வலியுறுத்தியுள்ளார்….

தமிழக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா ஏற்புக்கு எதிர்ப்பு.. சென்னை ஐகோர்ட்டில் வழக்கு Chennai High Court

தமிழக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா ஏற்புக்கு எதிர்ப்பு.. சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

Chennai High Court: தமிழக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா ஏற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com