மரவள்ளி கிழங்குக்கு விலை நிர்ணயம்.. அன்புமணி இராமதாஸ்!

Anbumani Ramadoss: மரவள்ளி கிழங்குக்கு விலை நிர்ணயம் என அன்புமணி இராமதாஸ், தமிழக அரசுக்கு வலியுறுத்தி உள்ளார்.

Published on: January 8, 2026 at 3:42 pm

சென்னை ஜனவரி 8, 2026: மரவள்ளி கிழங்குக்கு விலை நிர்ணயம் என அன்புமணி இராமதாஸ், தமிழக அரசுக்கு வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்,”தமிழ்நாட்டில் ஜவ்வரிசி, ஸ்டார்ச் தயாரிப்புக்கு மூலப் பொருளாக விளங்கும் மரவள்ளிக் கிழங்கின் விலை அண்மைக்காலங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பையும், தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றாதது தான் இதற்குக் காரணமாகும். கடமையைச் செய்யத் தவறியதன் மூலம் மரவள்ளி விவசாயிகளுக்கு திமுக அரசு பேரிழப்பை ஏற்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “குறைந்தபட்சம் மரவள்ளிக் கிழங்குக்கு கொள்முதல் விலையை அரசு நிர்ணயித்திருந்தால் கூட, அதற்கு நியாயமான விலை கிடைத்திருக்கும். 2021&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்,‘‘ உழவர்கள் உற்பத்தி செய்யும் வாழை, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு, பருப்பு வகைகள், மிளகாய், சிறுதானியங்கள், தேயிலை, எண்ணெய்வித்துக்கள், தோட்டக்கலைப் பொருட்கள் ஆகிய அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும். (வாக்குறுதி எண் & 35)’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இன்று வரைக்கும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. உழவர்களின் துயரத்திற்கு இதுவே காரணம்.

இதையும் படிங்க; அமித் ஷா வருகை மு.க ஸ்டாலினை பாதித்துள்ளது.. வானதி சீனிவாசன்!

உரவிலை உயர்வு, தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணங்களால் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செலவு அதிகரித்துள்ளது. உழவர்கள் அரும்பாடுபட்டு விளைவிக்கும் மரவள்ளிக் கிழங்குக்கு டன்னுக்கு ரூ.4,700 மட்டும், அதாவது கிலோவுக்கு ரூ.5க்கும் குறைவாக வழங்குவது நியாயமல்ல. உழவர்கள் நலனில் திமுக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியிருக்க வேண்டும் அல்லது ஜவ்வரிசி, ஸ்டார்ச் ஆகியவை முழுக்க முழுக்க சாகோசர்வ் அமைப்பின் மூலமாக விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்திருக்க வேண்டும். இந்த இரண்டையும் செய்யாதது தான் மரவள்ளிக்கிழங்கின் விலை வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்திருப்பதற்கு காரணம் ஆகும். இது உழவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்.

உழவர்களுக்கு எதிரான துரோகத்தை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும். மரவள்ளி சாகுபடியில் உழவர்களுக்கு லாபம் கிடைப்பதை உறுதி செய்ய மரவள்ளிக் கிழங்குக்கு டன்னுக்கு ரூ.16,000 கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். ஸ்டார்ச், ஜவ்வரிசி ஆகியவை சாகோசர்வ் வாயிலாக போட்டி ஏல முறையில் விற்பனை செய்யப்படுவதையும், அவற்றுக்கு நியாயமான விலை கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: டெல்லி குளிரில் சூடான அரசியல்.. அமித் ஷாவுடன் எடப்பாடி சந்திப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com