அனுபவம் இல்லாத அமைச்சர்கள், புதிய எம்.எல்.ஏ.க்கள்.. தவெக அரசுக்கு நேரம் கொடுங்கள்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்

P Chidambaram: புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசுக்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தினார்.

Published on: June 12, 2026 at 12:53 pm

சென்னை, ஜுன் 12 2026: தமிழக வெற்றி கழக அரசு புதிதாக பொறுப்பேற்றுள்ள நிலையில், அந்த அரசுக்கு தங்களை நிலைநிறுத்திக் கொள்ள போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்ததாவது, தவெக தற்போது தான் ஆட்சிக்கு வந்துள்ளனர். 31 அமைச்சர்களுக்கு சட்டப்பேரவையில் முன் அனுபவம் இல்லை. மேலும், 101 எம்.எல்.ஏ.க்கள் முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் நுழைந்துள்ளனர். எந்த புதிய அரசாக இருந்தாலும் அதற்கு மூன்று முதல் ஆறு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், டிவிகே அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது குறித்து விளக்கம் அளித்த அவர், மதச்சார்பின்மையும் மாநில உரிமைகளையும் பாதுகாப்போம் என அவர்கள் கூறுகின்றனர். இந்த இரண்டு அம்சங்களே காங்கிரஸின் சித்தாந்தங்களுடன் ஒத்துப்போகின்றன. அவர்கள் இந்த அடிப்படை கொள்கைகளில் இருந்து விலகாத வரை ஆதரிப்பதில் தவறு இல்லை.

மேலும், சிபிஐ, சிபிஎம், விசிகே, ஐயுஎம்எல் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் அரசின் நிலைத்தன்மையை உறுதி செய்யவே ஆதரவு அளித்ததாக அவர் தெரிவித்தார். ஆதரவு இல்லையெனில் புதிய தேர்தல் அல்லது ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் அபாயம் இருந்திருக்கும்; அது பாஜக அரசுக்கு பின்வாசல்வழியாக நுழைய வாய்ப்பாக மாறியிருக்கும் என்றார்.

டிவிகேவின் தேர்தல் வெற்றி வரலாற்றுச் சாதனை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய கட்சி, 35% வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளது. இது திமுக தலைமையிலான கூட்டணியின் 24% வாக்கு சதவீதத்தை விட மிக அதிகம். இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் பெரும் ஆதரவு இந்த வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு வாக்கு டிவிகேவுக்கு சென்றது. இளைஞர்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கான சிறப்பு திட்டங்களை அரசு முன்னுரிமையுடன் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக்கால சாதனைகள் தொடர்பாக வரலாற்றுப் பின்னணியை கருத்தில் கொள்ளாமல் சில ஊடகங்கள் செய்தி வெளியிடுவதாக விமர்சித்தார்.

இதையும் படிங்க : மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் திட்டமிட்டப்படி கும்பாபிஷேகம்.. அமைச்சர் உறுதி

குருவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடி மதிப்பிலான சிறப்பு தொகுப்பு திட்டம்.. முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
₹135 Crore Special Package

குருவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடி மதிப்பிலான சிறப்பு தொகுப்பு திட்டம்.. முதலமைச்சர்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com