Three language policy issue: மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Three language policy issue: மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Published on: May 17, 2025 at 11:14 pm
சென்னை, மே 17 2025: மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுத்ததால் மத்திய அரசு ரூ.2 ஆயிரத்து 152 கோடியை விடுவிக்க மறுக்கிறது எனவும் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய மு.க. ஸ்டாலின், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிடும். மேலும், உச்ச நீதிமன்றத்தை நாடி தமிழ்நாடு வெற்றி பெறும்” எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய, தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை என்ற நூலை வெளியிட்டார்.
மும்மொழிக் கொள்கை ஏற்க மறுப்பு
அப்போது இதனை அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கைதான் தொடரும் என மு.க. ஸ்டாலின் உறுதியாக தெரிவித்தார். மேலும், இந்தத் திட்டத்தை ஏற்க மறுப்பதால் உரிய நிதியை மத்திய அரச விடுவிக்க மறுக்கிறது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்க தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த மத்திய கல்வி அமைச்சர் திமுக இந்த விவகாரத்தில் அரசியல் லாபத்துக்காக கபட நாடகம் ஆடுகிறது என கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் ஓ.பி.எஸ்; நயினார் நாகேந்திரன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com