Mettur dam water level | தொடர்மழை காரணமாக காவிரி மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
Mettur dam water level | தொடர்மழை காரணமாக காவிரி மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
Published on: October 16, 2024 at 3:32 pm
Mettur dam water level | வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் கர்நாடகா – தமிழக எல்லையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 15,531 கனஅடி (கனஅடி)யாக இருந்தது. இந்நிலையில், இன்று காலை 16,196 கனஅடியாக உயர்ந்துள்ளது. காவிரி டெல்டா பகுதிகளுக்கு பாசன வசதி அளிக்கும் வகையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 7 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், கிழக்கு-மேற்கு கால்வாயில் பாசனத்துக்கு திறக்கப்படும் நீர் 500 கன அடியில் இருந்து 300 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com