Kallakurichi Case | கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் நாட்டையை உலுக்கின. இந்த சாராயம் குடித்தவர்களில் 193 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 67 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரி பா.ஜ.க மற்றும் பா.ம.க தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் டி. கிருஷ்ண குமார், பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை (நவ.20, 2024, புதன்கிழமை) தீர்ப்பு வழங்க உள்ளது.
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்களை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. தி.மு.க. ஆட்சி அமைந்த பின்பு இரு முறை தொடர்ச்சியாக கள்ளச் சாராய மரணங்கள் நிகழ்ந்தன. இதனை எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டின. பதிலுக்கு பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் நிகழ்ந்த கள்ளச் சாராய மரணங்களை தி.மு.க. சுட்டிக் காட்டியது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க இண்டிகோ கொடுத்த இனிப்பான அறிவிப்பு; டிசம்பர் 21 முதல் மலேசியாவுக்கு நேரடி விமான சேவை!
Vijays First Moves as CM : தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் இன்று (மே 10, 2026) பொறுப்பேற்ற நிலையில், அவர் முதல் கையெழுத்தான இலவச மின்சார…
CM Vijay First Speech : தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் நான் தவறு செய்ய மாட்டேன் தவறு செய்யவும் விடமாட்டேன் என்று தெரிவித்தார்….
DMK Support for AIADMK? தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி அமைக்கப் போவதாக எழுந்துள்ள செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்