Kallakurichi Case | கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் நாட்டையை உலுக்கின. இந்த சாராயம் குடித்தவர்களில் 193 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 67 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரி பா.ஜ.க மற்றும் பா.ம.க தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் டி. கிருஷ்ண குமார், பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை (நவ.20, 2024, புதன்கிழமை) தீர்ப்பு வழங்க உள்ளது.
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்களை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. தி.மு.க. ஆட்சி அமைந்த பின்பு இரு முறை தொடர்ச்சியாக கள்ளச் சாராய மரணங்கள் நிகழ்ந்தன. இதனை எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டின. பதிலுக்கு பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் நிகழ்ந்த கள்ளச் சாராய மரணங்களை தி.மு.க. சுட்டிக் காட்டியது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க இண்டிகோ கொடுத்த இனிப்பான அறிவிப்பு; டிசம்பர் 21 முதல் மலேசியாவுக்கு நேரடி விமான சேவை!
AMMK Removes MLA Backing TVK : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை ஆதரிக்கிறேன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் எம்.எல்.ஏ காமராஜ் தெரிவித்துள்ளார்….
Thoothukudi : தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….
717 TASMAC Shops Shut Down : தமிழகத்தில் செயல்பட்டு வரும் 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்