Chennai Cop suspended: பெண் காவலர் அளித்த பாலியல் புகார் வழக்கில் போக்குவரத்து இணை ஆணையர் மகேஷ் குமார் ஐபிஎஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
Chennai Cop suspended: பெண் காவலர் அளித்த பாலியல் புகார் வழக்கில் போக்குவரத்து இணை ஆணையர் மகேஷ் குமார் ஐபிஎஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
Published on: February 13, 2025 at 2:39 pm
சென்னை போக்குவரத்து காவல்துறையில் இணை ஆணையராக பணிபுரிந்து வந்தவர் மகேஷ் குமார் ஐபிஎஸ். இவர் பெண் போலீஸ் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார்கள் இருந்தன. இந்த புகாரைத் தொடர்ந்து சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ் குமார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கையும் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை – என்ன நடந்தது?
சென்னையில் போக்குவரத்து வடக்கு மண்டல இணை ஆணையராக பணிபுரிந்து வந்தவர் மகேஷ் குமார். ஐபிஎஸ் அதிகாரியான இவர் மீது, காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் போக்குவரத்து பெண் போலீஸ் ஒருவர் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில் மகேஷ் குமார் தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவுக்கு உள்ளாக்கினார் என கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
பெண் போலீஸ் புகாரை தொடர்ந்து விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது. தொடர்ந்து மகேஷ் குமார் ஐபிஎஸ்சுக்கு எதிராக போலீசார் விசாரணையை தொடங்கினர். காவல்துறை இந்த விசாரணையின் தொடக்கத்திலேயே மகேஷ் குமார் மீது அளிக்கப்பட்ட புகாரில் முகாந்திரம் இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
இதை எடுத்து அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டு தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த விசாகா கமிட்டி சீமா அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. மகேஷ் குமார் ஐபிஎஸ் பாதிக்கப்பட்ட போலீசுக்கு கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மகேஷ் குமார் மீது அடுத்து வழக்கு பதிவு செய்யப்படுமா என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. இதற்கு அடுத்து அவர் மீது சட்ட ரீதியான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: காதலியின் தாய் கழுத்தை நெரித்த காதலன்.. சென்னையில் பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com