ஐ.ஏ.எஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் மரணம்..!

IAS officer Beela Venkatesan dies in Chennai: பிரபல ஐ.ஏ.எஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் மரணம் அடைந்தார். உடல்நலப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் அவரது உயிர் பிரிந்தது.

Published on: September 24, 2025 at 9:29 pm

சென்னை, செப்.24, 2025: தமிழ்நாட்டின் பிரபல ஐ.ஏ.எஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் மரணம் அடைந்தார். உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் அவரது உயிர் பிரிந்தது.
55 வயதான பீலா வெங்கடேசன், தமிழ்நாட்டின் எரிசக்தித் துறை முதன்மை செயலாளராக செயல்பட்டு வந்தார். இவர் உடல் நலப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஐ.ஏ.எஸ் அதிகாரியான பீலா வெங்கடேசன், கொரோனா காலத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக செயல்பட்டார்.
அப்போது இவர் தமிழக மக்கள் இடையே மிகவும் பிரபலமாக அறியப்பட்டார். பீலா வெங்கடேசன் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாழையடி என்ற ஊரைச் சேர்ந்தவர். இவரது தந்தை எல்.என் வெங்கடேசன் காவல்துறையில் டி.ஜி.பி.யாக பதவி வகித்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சென்னையில் 3 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.. மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர்

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com