Kanyakumari | முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் கோவில் கொண்டுள்ள பகவதி அம்மன் திருக்கோவிலின் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சபரிமலை திருக்கோவில் மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. அங்கு தினம்தோறும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி, ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
இதில் சில பக்தர்கள் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்துவிட்டு கன்னியாகுமரிக்கு வருவது வழக்கம். மேலும் சில பக்தர்கள் கன்னியாகுமரியில் தரிசனம் செய்து விட்டு ஐயப்ப சுவாமியை காண செல்வதும் வழக்கம்.
இதனால் கன்னியாகுமரியில் வழக்கத்துக்கு மாறாக கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு நற்செய்தியாக, குமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தினந்தோறும் பகவதி அம்மன் கோவிலில் அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு நண்பர்கள் 12 30 மணிக்கு சாத்தப்படும். அதேபோல், மாலை 4 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு மூடப்படும். இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக நண்பகல் அரை மணி நேரமும் இரவு அரை மணி நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவில் நடை ஆனது நண்பகல் 1:00 மணிக்கும் இரவு 9:00 மணிக்கு சாத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Tamil Nadu person was attacked in Bengaluru: பெங்களூருவில் தமிழர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் தனது கண்டனத்தை மருத்துவர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்….
Thol Thirumavalavans remarks about Tamil kings: தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? எனக் கேள்வியெழுப்பியுள்ள டி.டி.வி தினகரன், தொல்….
TN Journalists Kidnapping Case: “கனிமக்கொள்ளையை படம் பிடித்த செய்தியாளர் கடத்தல் விவகாரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய வேண்டும்” என பா.ம.க தலைவர் அன்புமணி…
Conference of Kammavars in Tamil Nadu: சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கம்மா சர்வதேச கூட்டமைப்பு (கே.ஜி.எஃப்) மாநாடு 2026, பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறுகிறது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்