Kanyakumari | முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் கோவில் கொண்டுள்ள பகவதி அம்மன் திருக்கோவிலின் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சபரிமலை திருக்கோவில் மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. அங்கு தினம்தோறும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி, ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
இதில் சில பக்தர்கள் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்துவிட்டு கன்னியாகுமரிக்கு வருவது வழக்கம். மேலும் சில பக்தர்கள் கன்னியாகுமரியில் தரிசனம் செய்து விட்டு ஐயப்ப சுவாமியை காண செல்வதும் வழக்கம்.
இதனால் கன்னியாகுமரியில் வழக்கத்துக்கு மாறாக கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு நற்செய்தியாக, குமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தினந்தோறும் பகவதி அம்மன் கோவிலில் அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு நண்பர்கள் 12 30 மணிக்கு சாத்தப்படும். அதேபோல், மாலை 4 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு மூடப்படும். இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக நண்பகல் அரை மணி நேரமும் இரவு அரை மணி நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவில் நடை ஆனது நண்பகல் 1:00 மணிக்கும் இரவு 9:00 மணிக்கு சாத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
TTV Dinakaran: ”சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரத்தோடு மழலைக் குழந்தைகளின் எதிர்காலத்தோடும் விளையாடும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.” என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கடும்…
K Veeramani : தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வரவெற்பு தெரிவித்துள்ளார்….
“திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர். பாலு அவர்களின் மனைவியும், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்களின் அன்னையுமான ரேணுகா தேவி அவர்கள்…
“சிறுநீரகக் கொள்ளை பதட்டம் தீரும் முன்பே கல்லீரல் திருட்டு” என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்