Dr Ramadoss: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பா என்ற கேள்விக்கு டாக்டர் ராமதாஸ் அதிரடியாக பதில் அளித்தார்.
Dr Ramadoss: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பா என்ற கேள்விக்கு டாக்டர் ராமதாஸ் அதிரடியாக பதில் அளித்தார்.
Published on: April 10, 2025 at 4:22 pm
சென்னை ஏப்ரல் 10 2025: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ், இன்று (ஏப்ரல் 10 2025) அக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். கட்சியின் செயல் தலைவராக அன்புமணி ராமதாஸுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ், தலைவராக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அவருக்கு செயல் தலைவர் என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மருத்துவர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கட்சியின் நிறுவனரான தாம் தலைவராக செயல்படுவதாக தெரிவித்தார். மேலும் அன்புமணி ராமதாசுக்கு, கட்சியில் செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி தொடருமா கேள்வி எழுப்பினார்கள்? இதற்கு பதில் அளித்த மருத்துவர் ராமதாஸ், ” கட்சியின் நிறுவனரான நான் தற்போது தான் தலைவராக பதவியேற்று உள்ளேன். இது தொடர்பாக கட்சி நிர்வாக குழு மற்றும் செயல் குழு கூட்டங்கள் நடைபெறும். அதன் பின்னர் இது தொடர்பாக தெரிவிக்கப்படும்” என்றார்.
மருத்துவர் அன்புமணி ராமதாஸுக்கு செயல் தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது பாட்டாளி மக்கள் கட்சியில் குழப்பம் இருப்பதை காட்டும் வகையில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: சார் ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com