சென்னையில் பெண் போலீஸ் தற்கொலை.. மன அழுத்தம் காரணமா?

Chennai: சென்னையில் பெண் போலீஸ் ஒருவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவலர் செல்வியின் மரணத்திற்கு காரணம் என்ன?

Published on: March 23, 2025 at 12:30 pm

சென்னை, மார்ச் 23, 2025: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை பூர்வீகமாக கொண்டவர் செல்வி. இவரின் கணவர் 41 வயதான நல்லுச்சாமி சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இந்த ஜோடிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களின் மகள் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

தற்போது இவர்களின் மகன் மதுரையில் தங்கி படித்து வருகிறார். செல்வி, சென்னை புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பு ஈ பிளாக்கில் வசித்து வருகிறார். இவர் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸாக பணிபுரிந்து வந்தார். காவலர் செல்வி சென்னை மட்டுமின்றி சிவகங்கை, தேவகோட்டை மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசாக பணிபுரிந்துள்ளார்.

இந்த நிலையில், காவலர் செல்வியை செல்போனில் தொடர்பு கொண்டு பேச முடியவில்லை. இதனால் சக போலீசார் இதுகுறித்து கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அதிகாலை 7:00 மணிக்கு வீட்டின் கதவை தட்டிய போது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. தொடர்ந்து போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது செல்வி துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்வியின் மரணத்திற்கு என்ன காரணம்?

காவலர் செல்வி சரித்திர பதிவேடு குற்றவாளியான நல்லுசாமி என்பவர் உடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையிலும் நல்லுசாமி குற்றச் செயல்களை கைவிடவில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையில் கொலை சம்பவம் ஒன்றிலும் நல்லுசாமியின் பெயர் அடிபட்டதாகவும், இது காவலர் செல்விக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்தது என்றும் கூறப்படுகிறது.

மேலும் இது தொடர்பாக காவலர் செல்விக்கும் கணவர் நல்லுச்சாமிக்கும் இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டதாகவும் இதனால் செல்வி மணமடைந்து காணப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
செல்வியின் உடலை கைப்பற்றிய போலீசார் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதையும் படிங்க மது குடித்த படி உல்லாசம்.. திடீரென கதவைத் தட்டிய போலீஸ்.. பரபரப்பு ஸ்டோரி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com