Thol Thirumavalavan: தென் மாவட்டங்களில் சாதிய வன்கொடுமைகள் அதிகரித்து காணப்படுகின்றன என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.
Thol Thirumavalavan: தென் மாவட்டங்களில் சாதிய வன்கொடுமைகள் அதிகரித்து காணப்படுகின்றன என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.
Published on: March 13, 2025 at 6:18 pm
Updated on: March 13, 2025 at 6:22 pm
மதுரை மார்ச் 13, 2025: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் கடலூர் மக்களவை எம்பியுமான தொல் திருமாவளவன் மதுரையில் இன்று (மார்ச் 13, 2025) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தென் மாவட்டங்களில் சாதிய வன்கொடுமைகள் அதிகரித்து காணப்படுகின்றன” என குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ” தென் மாவட்டங்களில் சாதிய அடிப்படையிலான வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. மதுரை அருகே அழகர்சாமி என்ற இளைஞரை அவரது வீடு தேடி சென்று வெட்டி கொலை செய்துள்ளனர்.
இதேபோல் சிவகங்கை அருகே ஒரு இளைஞரை வெட்டி கொலை செய்து உள்ளார்கள்.
மேலும் சிறுவைகுண்டம் அருகே அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் நெல்லை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்; நான் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளேன்.
தமிழ்நாட்டில் சாதிய வன்கொடுமைகளை முன்கூட்டியே கண்டறிந்து அதனை தடுக்க ஒரு நுண் பிரிவு தேவை என்று நீண்ட காலமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி வருகிறது.
சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் வன்முறைகள் நடைபெறாமல் இருப்பதற்கு முன்கூட்டியே அவற்றை கண்டறிந்து தடுப்பதற்கு கட்டாயமாக ஒரு புலனறிவு பிரிவு தேவை.
இதனை நான் தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கையாக வைக்கிறேன்; இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் செய்ய வேண்டும் என்பதையும் நாங்கள் வேண்டுகோளாக விடுகிறோம்” என்றார்.
அண்மையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டார். பள்ளி மாணவரான அவரை பேருந்தில் இருந்து இறங்கச் சொல்லி தாக்கியதாக புகார்கள் எழுந்துள்ளன.
தாக்குதலுக்கு உள்ளான மாணவருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: அமைச்சர் ரகுபதியை அடையாளம் காட்டியது அதிமுக; டி ஜெயக்குமார் காட்டம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com