ADGP Jayaram Case: சிறுவன் கடத்தல் வழக்கில், அரசு வாகனம் பயன்படுத்தப்பட்டதாக ஏ.டி.ஜி.பி ஜெயராம் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
ADGP Jayaram Case: சிறுவன் கடத்தல் வழக்கில், அரசு வாகனம் பயன்படுத்தப்பட்டதாக ஏ.டி.ஜி.பி ஜெயராம் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
Published on: June 18, 2025 at 7:02 pm
சென்னை, ஜூன் 18 2025: சென்னையை அடுத்த திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஏ.டி.ஜி.பி.யாக இருப்பவர் ஜெயராம். ஐ.பி.எஸ் அதிகாரியான இவர் மீது பரபரப்பு புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன.
காதல் விவகாரத்தில் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. சிறுவனை கடத்தியதாக புகார்கள் எழுந்தன. இந்த கடத்தல் விவகாரத்தில் ஏ.டி.ஜி.பி ஜெயராமின் அரசு வாகனம் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், ஏ.டி.ஜி.பி ஜெய ராம் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் 20 மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும், எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்தியிடம் போலீசார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஏ.டி.ஜி.பி ஜெய ராம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று (ஜூன் 18 2025) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதனால், மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபடும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க :
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com