Annamalai condemns harassment of female police officer: திமுக அரசும், காவல்துறையும் செயல்படாமல் இருப்பதைத் தொடர்ந்தால், பொதுமக்களே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
Annamalai condemns harassment of female police officer: திமுக அரசும், காவல்துறையும் செயல்படாமல் இருப்பதைத் தொடர்ந்தால், பொதுமக்களே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
Published on: February 17, 2025 at 6:35 pm
சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலருக்கு அளிக்கப்பட்ட பாலியல் தொல்லை விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் காவலர் ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும். தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது எனக் கூறியுள்ள கு. அண்ணாமலை, அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ சமூகவிரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, ஒட்டு மொத்த அரசு இயந்திரமே செயலிழந்து கிடக்கிறது. சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையடுத்து, முதலமைச்சர் வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடக்கிறார் எனக் கூறியுள்ள அண்ணாமலை, தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி வெளிவருகிறது. அரசுத் தரப்பில் இருந்தும், காவல்துறை தரப்பில் இருந்தும் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், திமுக அரசும், காவல்துறையும் செயல்படாமல் இருப்பதைத் தொடர்ந்தால், பொதுமக்களே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரித்துள்ள கு. அண்ணாமலை, இது சமூகத்தை எங்கு கொண்டு செல்லும் என்பதை உணர்ந்திருக்கிறாரா முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்? எனவும் கேள்வியெழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க சாதி வாரி கணக்கெடுப்பு அவசியம்.. செவி சாய்க்குமா தமிழ்நாடு அரசு? போராட்டம் அறிவித்த பா.ம.க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com