Anbumani Ramadoss: தி.மு.க. அரசின் மோசடிகளுக்கு அளவே இல்லையா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.
Anbumani Ramadoss: தி.மு.க. அரசின் மோசடிகளுக்கு அளவே இல்லையா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.
Published on: September 13, 2025 at 10:57 am
சென்னை, செப்.13, 2025: அன்புமணி ராமதாஸ் வெள்ளிக்கிழமை (செப்.12,2025) விடுத்திருந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 150 நாள்கள் வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு, இதுவரை வெறும் 9 நாள்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு வேலை வழங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி தமிழக அரசுக்கு மத்திய அரசு மிகக்குறைந்த நிதியை மட்டுமே வழங்கியுள்ள நிலையில், அதை எதிர்க்கவும், கூடுதல் நிதி பெற எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தொழிலாளர்களை தமிழக அரசு சுரண்டி வருவது கண்டிக்கத்தக்கது”எனக் குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க. வாக்குறுதி
மேலும், “ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாட்டு மக்களுக்கு 150 நாள்கள் வேலை பெற்று தருவோம் என்று வாக்குறுதி அளித்திருந்த திமுக, மனித வேலை நாள்கள் குறைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். தமிழகத்திற்கு 12 கோடி மனித வேலை நாள்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஏப்ரல் 20&ஆம் தேதி அறிக்கை வெளியிட்ட பா.ம.க. ஒவ்வொரு குடும்பத்திற்கு சராசரியாக 50 நாள்களாவது வேலை வழங்கும் வகையில் 43 கோடி மனித நாள்கள் வேலை வழங்கும்படி மத்திய அரசை வலியுறுத்தியிருந்தது.
ஆனால், நடப்பு நிதியாண்டு தொடங்கி 6 மாதங்கள் முடிவடையவுள்ள நிலையில் வேலை நாள்களை அதிகரிக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் கூட எழுதவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “-நடப்பாண்டில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 74.75 லட்சம் குடும்பங்களுக்கும் சராசரியாக 50 நாள்களாவது வேலை வழங்கும் வகையில் 43 கோடி மனித வேலை நாள்களை பெறவும், அதற்காக ஆகும் ரூ.18,106 கோடி செலவில் மத்திய அரசின் பங்காக ரூ.16,296 கோடியை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை.. மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com