ராமேஸ்வரம்: இலங்கை மீனவர்கள் 3 பேர் கைது

Rameswaram | Indian Navy |ராமேஸ்வரம் கடலில் இலங்கை மீனவர்கள் 3 பேர் இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

Published on: September 18, 2024 at 7:59 am

Rameswaram | Indian Navy | இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்த ராமலிங்கம் நிரோஷன் (வயது 34), பால ரமேஷ் (38) மற்றும் பி.புல்லை குமார் (44) ஆகியோர் ராமேஸ்வரம் சர்வதேச கடல் பகுதியை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்தனர்.
இவர்களிடம் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்களிடம் எந்த கடத்தல் பொருளும் இல்லை என்பது தெரியவந்தது.

மேலும் சேதம் அடைந்த மீன்பிடி வலைகள் காணப்பட்டன. தொடர்ந்து இவர்களை கடலோர பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது ராமேஸ்வரம் மண்டபம் கடலோர பாதுகாப்பு படை போலீசார் பாஸ்போர்ட் இன்றி இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க : மதுரை டிவிஷனில் பணி: குருவாயூர் உள்பட முக்கிய ரயில்களில் செப்.19 முதல் அக்.9 வரை மாற்றம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com