பிரெஞ்ச் டென்னிஸ்.. அதிர்ச்சி கண்ட ஆரினா.. ரஷ்ய வீராங்கனை அபார வெற்றி!

Sabalenka : பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீராங்கனையிடம் தோல்வியை தழுவியுள்ளார் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆரினா.

Published on: June 3, 2026 at 8:52 pm

Updated on: June 3, 2026 at 10:23 pm

பாரிஸ், ஜூன் 3, 2026: கிழக்கு ஐரோப்பியாவின் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவரும், உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையுமான ஆரினா சபலென்கா, பிரெஞ்ச் ஓபன் காலிறுதியில் ரஷ்யாவின் டியானா ஷ்னைடரிடம் அதிர்ச்சியூட்டும் தோல்வியை சந்தித்தார்.

மூன்றாவது செட்டில் 6-0 என போட்டி சென்றதால், பாரிசில் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு அவருக்கு முற்றிலும் நழுவியது.
சபலென்கா முதல் செட்டை 3-6 என வென்றார், இரண்டாவது செட்டில் 5-3 முன்னிலையில் இருந்தபோது வெற்றிக்கு இரண்டு புள்ளிகள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், ஷ்னைடர் அவரை பிரேக் செய்தார்.

தொடர்ந்து நான்கு கேம்களை வென்று இரண்டாவது செட்டை கைப்பற்றிய ஷ்னைடர், முடிவுச்சட்டில் முழுமையாக ஆட்டத்தை கட்டுப்படுத்தினார்.
மூன்றாவது செட்டின் தொடக்கத்தில் 17 புள்ளிகள் நீண்ட சேவை கேமில் சபலென்கா முறியடிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் அடிக்கடி தவறுகள் செய்ததால், ஷ்னைடர் தொடர்ந்து பத்து கேம்களை வென்று 6-0 என வெற்றியை உறுதி செய்தார்.

இந்த தோல்வி, சபலென்காவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பிரெஞ்ச் ஒபனில் கடந்த 14 கிராண்ட்ஸ்லாம்களில் 13 முறை அரையிறுதிக்கு சென்ற அவர், இப்போது இரண்டாவது முறையாக அதில் தோல்வியடைந்துள்ளார்.

மறுபுறம், உலகின் 23ஆம் இடத்தில் உள்ள வீராங்கனையான ஷ்னைடருக்கு இது மிகப்பெரிய வெற்றி; அவர் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் இறுதிக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com