சொந்த மண்ணில் சொதப்பிய சென்னை.. நெஞ்சில் அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!

IPL 2025 CSK loses to Delhi: டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது.

Published on: April 5, 2025 at 11:04 pm

சென்னை, ஏப்ரல் 5 2025: சென்னை, சேப்பாக்கத்தில் உள்ளஎம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் டெல்லி கேப்பிட்டல் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல் பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர் ஜாக் பிராசர் மெக் கூர்க் பூஜ்ஜிய ரன்னில் பெவிலியன் திரும்பினார். எனினும் மற்றொரு தொடக்க வீரரான கேஎல் ராகுல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை அப்பளம் போல் நொறுக்கினார். இவர் 51 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். இதில் மூன்று சிக்ஸர் 6 பவுண்டரிகள் அடங்கும்.

இந்த நிலையில் அபிஷேக் போரல் 33 ஓட்டங்களும் (1 சிக்ஸர் நாலு பவுண்டரி), அக்ச்சர் பட்டேல் 21 ரன்னும் (1 சிக்ஸர் 2 பவுண்டரி), சமீர் ரிஸ்வி 20 ரன்னும், திரிஸ்டன் டப்ஸ் 24 ரன்னும் எடுத்தனர்.
இதனால் டெல்லி கேப்பிட்டல் அணி நிர்வகிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் கலீல் அகமது இரண்டு விக்கட்டும், ரவீந்திர ஜடேஜா, நூர் அகமது, மதிஷா பத்திரண்ணா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டம் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திர 3 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் தேவோன் கான்வென்ட் 13 ரன்னில் நடையை கட்டினார்.

கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் ஐந்து ரன்னில் கை வீசினார். எனினும் மறுபுறம் விஜய் சங்கர் நின்று நிதானமாக ஆடி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பந்துவீச்சை நொறுக்கினார்.
விஜய் சங்கர் 54 பந்துகளில் 69 ரன்கள் குவித்து இருந்தார். இதில் ஒரு சிக்சர் ஐந்து பவுண்டரிகள் அடங்கும்.

இந்த நிலையில் சிவம் துபை, தன் பங்குக்கு 18 ரன்னும், ரவீந்திர ஜடேஜா 2 ரன்னும், மகேந்திர சிங் தோனி அவுட் ஆகாமல் 30 ரன்னும் எடுத்தனர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதையடுத்து, 25 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல் அணி வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதரப்பில் மிச்சல் ஸ்டாக், முகேஷ் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்திருந்தனர். விப்ராஜ் நிகம் இரு விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.

இதையும் படிங்க: KKR vs MI : சொந்த மண்ணில் உறுமிய மும்பை.. அடங்கிப்போன கொல்கத்தா!

நம் எதிர்ப்பை கண்டு உத்ரவாதம் அளித்த மோடி, ஷா.. மு.க ஸ்டாலின் பரபரப்பு ட்வீட்! MK Stalin

நம் எதிர்ப்பை கண்டு உத்ரவாதம் அளித்த மோடி, ஷா.. மு.க ஸ்டாலின் பரபரப்பு

MK Stalin : தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்….

மு.க. ஸ்டாலின் வடக்கு-தெற்குப் பிளவை உருவாக்க முயற்சிக்கிறார்..எம்.பி. ஷாம்பவி சௌத்ரி Shambhavi Choudhary

மு.க. ஸ்டாலின் வடக்கு-தெற்குப் பிளவை உருவாக்க முயற்சிக்கிறார்..எம்.பி. ஷாம்பவி சௌத்ரி

Shambhavi Choudhary : மு.க. ஸ்டாலின் வடக்கு-தெற்குப் பிளவை உருவாக்க முயற்சிக்கிறார் என்று எல்ஜேபி (ராம் விலாஸ்) எம்.பி. ஷாம்பவி சௌத்ரி தெரிவித்தார்….

Tamil News Updates April 17 2026: கனிமொழி என்பவர் குடும்ப எம்.பி… அண்ணாமலை

Tamil News Updates April 17 2026: கனிமொழி என்பவர் குடும்ப எம்.பி… அண்ணாமலை

Tamil News Updates April 17 2026 : தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….

சபரிமலை கூட்டத்தில் காக்கி உடையில் மோகன் லால்.. மீண்டும் போலீஸ் கதாபாத்திரம்! Mohanlal’s L 366

சபரிமலை கூட்டத்தில் காக்கி உடையில் மோகன் லால்.. மீண்டும் போலீஸ் கதாபாத்திரம்!

Mohanlal’s L 366: மோகன்லாலின் 366வது படமான புதிய படத்துக்கு அதிமனோகரம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது; இந்தப் படத்தின் போஸ்டரும் வெளியாகியுள்ளது….

ஹலோ மிஸ்டர் மோடி.. பிரான்சில் இருந்து வந்த அழைப்பு.. என்ன பேசினார் மேக்ரோன்? Narendra Modi

ஹலோ மிஸ்டர் மோடி.. பிரான்சில் இருந்து வந்த அழைப்பு.. என்ன பேசினார் மேக்ரோன்?

Narendra Modi: பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினார்; அப்போது, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ‘தடையற்ற கப்பல் போக்குவரத்து குறித்து…

சாணக்கியரே அதிர்ந்து இருப்பார்.. அமித் ஷாவை விமர்சித்த பிரியங்கா காந்தி! Priyanka Gandhi

சாணக்கியரே அதிர்ந்து இருப்பார்.. அமித் ஷாவை விமர்சித்த பிரியங்கா காந்தி!

Priyanka Gandhi: சாணக்கியர் இன்று உயிரோடு இருந்திருந்தால் அதிர்ச்சி அடைந்திருப்பார் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்….

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com