மகளிர் டி-20 உலக கோப்பை.. இந்திய அணி வெளியேறியது ஏன்? ஹர்மன்ப்ரீத் கௌர்

T20 Womens World Cup : மகளிர் டி-20 உலக கோப்பையில் இந்திய அணி வெளிளேறியது ஏன் என ஹர்மன்ப்ரீத் கௌர் விளக்கம் அளித்துள்ளார்.

Published on: June 29, 2026 at 12:32 pm

Updated on: June 29, 2026 at 12:41 pm

புதுடெல்லி, ஜூன் 29, 2026: மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக குழு நிலையிலேயே வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியாவிடம் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததன் மூலம் இந்தியாவின் பயணம் முடிவுக்கு வந்தது. ஆனால் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், போட்டியின் முடிவை விட, அணியை நீண்ட காலமாகவே பாதித்து வரும் பிரச்சனையை சுட்டிக்காட்டினார்.

அவர் கூறியதாவது, வலிமையான அணிகளுக்கு எதிராக இந்தியா தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் தொடர்ந்து தவறி வருவதாகும். “சிறந்த அணிகளை எதிர்கொள்ளும்போது நமது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்,” என்று ஹர்மன்ப்ரீத் வலியுறுத்தினார்.

அவர் மேலும் குறிப்பிட்டது, முக்கியமான ஆட்டங்களில் இந்தியா நல்ல நிலையில் இருந்தாலும் கடைசி சில ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்துவிடுவது, அல்லது இலக்கை நோக்கி விளையாடும்போது தேவையான ரன்களை எடுக்க முடியாமல் போவது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதாகும். இது அணியின் நீண்டகால சவாலாகவே இருந்து வருகிறது.

இந்த ஆட்டத்தில் ஹர்மன்ப்ரீத் 27 பந்துகளில் 56 ரன்கள் குவித்து இந்தியாவின் பேட்டிங்கை வழிநடத்தியார். ஸ்மிருதி மந்தனா (38) மற்றும் ஷஃபாலி வர்மா (34) ஆகியோர் தொடக்கத்தில் நல்ல கூட்டணி அமைத்தனர்; ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி ஓவரில் ‘ரிட்டயர்ட் அவுட்’ ஆனார். சோஃபி மோலினக்ஸ் வீசிய பந்துகளில் ஹர்மன்ப்ரீத் அடித்த மூன்று தொடர்ச்சியான சிக்ஸர்கள், இந்திய அணியின் ஸ்கோரை சவாலான 170/4 என்ற நிலைக்கு உயர்த்தினாலும், இறுதியில் வெற்றி கைவிடப்பட்டது.

இதையும் படிங்க : இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்? பரபரப்பு தகவல்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com