Mythology | தஞ்சை பெரிய கோவிலில் சந்நிதி கொண்டுள்ள கருவூரார் சித்தர் பற்றி தெரியுமா?
Mythology | தஞ்சை பெரிய கோவிலில் சந்நிதி கொண்டுள்ள கருவூரார் சித்தர் பற்றி தெரியுமா?
Published on: November 20, 2024 at 8:08 am
Updated on: November 20, 2024 at 8:14 am
Mythology | கருவூரார் தேவர் கொங்குநாட்டில் உள்ள கருவூரில் பிறந்ததால் இவர் கருவூரார் என பெயர் பெற்றார். இவர் 18 சித்தர்களில் ஒருவர். இவர் போகரை குருவாக கொண்டு உபதேசம் பெற்றவர். முதலாம் ராஜராஜசோழன் (கி.பி. 985-1014) தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு லிங்க பிரதிஷ்டை செய்யும் பொழுது அஷ்டபந்தன மருந்து சாத்தினார்கள். மருந்து இறுக்கமாக இருந்தால்தான் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய முடியும்.
ஆனால் மருந்து இறுகாமல் இளகிக் கொண்டே இருந்தது. இதனால் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய முடியவில்லை. சிவாச்சாரியார்கள் பலர் முயன்றும் மருந்தை இருக வைக்க முடியவில்லை. இதைப் பார்த்து ராஜ ராஜ சோழன் மிகவும் கவலை அடைந்தார். இதை அறிந்த போகர் சித்தர் தன் சீடனுடைய மகிமையை உலகம் முழுவதும் அறிய செய்ய வேண்டும் என்று கருவூரார் தேவரை தஞ்சைக்கு வர செய்தார்.
தன் குருவின் உத்தரவுக்கு இணங்கி தஞ்சைக்கு வந்தார் கருவூரார் தேவர். அது நேரம் வரை இறுகாமல் இருந்த அஷ்டபந்தன மருந்தை கையில் எடுத்து சிவ சிந்தனையோடு அழுத்தி பிடிக்க மருந்து இறுகியது. என்ன ஒரு அதிசயம் அதுவரைக்கும் இறுகாமல் இருந்த மருந்தை இறுக செய்து லிங்கம் பிரதிஷ்டையை வெற்றிகரமாக செய்து முடித்தார் கருவூரார் சித்தர். தஞ்சை பெரிய கோயிலில் உள்ள கொன்றை மரத்தின் அருகில் கருவூர் சித்தருக்கென்று தனிச் சன்னிதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : உலகின் உயரமான மலை; கடுங்குளிர்: ஆதி சங்கரர் கண்டுபிடித்த சிவலிங்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com