Amarnath Yatra: அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Amarnath Yatra: அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Published on: June 20, 2025 at 1:44 pm
புதுடெல்லி, ஜூன் 20 2025: அமர்நாத் யாத்திரையின் போது பயங்கரவாத தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதற்கிடையில், இந்த உளவுத்துறை தகவல்கள் அனைத்து உள்ளூர் காவல் பிரிவுகள் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
மேலும், அனைத்து முக்கிய இடங்களிலும் விரைவான பதிலடி திறன்களை உறுதி செய்வதற்காக, பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் இன்னமும் பிடிக்கப்படாதது பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்களை அதிகரித்து வருகிறது. அதாவது, பிர் பஞ்சல் காட்டில் பதுங்கியிருந்து மற்றொரு தாக்குதலைத் திட்டமிடலாம் எனவும் பாதுகாப்பு ஏஜென்சிகள் எச்சரிக்கின்றன.
ஏனெனில், பஹல்காம் புனித குகைக்குச் செல்லும் யாத்ரீகர்களுக்கு ஒரு முக்கியமான பாதையாகும். மேலும் ஒவ்வொரு நாளும் 15,000 பேர் இந்த வழியைப் பயன்படுத்துவார்கள் இதனால் இப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு படையினரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : ‘இன்னும் அதிகமாக செய்ய முடியும்’; பாகிஸ்தானை எச்சரித்த ராஜ்நாத் சிங்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com