IAS officer Smita Sabharwal get notice: செயற்கை நுண்ணறிவால் உருவாக்கிய நிலப் படத்தைப் பகிர்ந்ததற்காக விமர்சனத்திற்கு உள்ளான தெலுங்கானா பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஸ்மிதா சபர்வாலுக்கு மாநில காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
IAS officer Smita Sabharwal get notice: செயற்கை நுண்ணறிவால் உருவாக்கிய நிலப் படத்தைப் பகிர்ந்ததற்காக விமர்சனத்திற்கு உள்ளான தெலுங்கானா பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஸ்மிதா சபர்வாலுக்கு மாநில காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Published on: April 17, 2025 at 3:08 pm
ஹைதராபாத், ஏப்.17 2025: ஹைதராபாத் பல்கலைக்கழகத்திற்கு (UoH) அருகில் அமைந்துள்ள காஞ்சா கச்சிபவுலியில் 400 ஏக்கர் நிலத்தின் ஏ.ஐ செயற்கை தொழில்நுட்பம் (AI)-உருவாக்கிய படத்தை தெலுங்கானா கேடரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஸ்மிதா சபர்வால் மீண்டும் வெளியிட்டார்.
இதற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்மிதா சபர்வாலுக்கு புதன்கிழமை (ஏப்.17 2025) சைபராபாத் காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதாவது, இந்த நிலம் தொடர்பாக சமூக ஊடகங்களில் தவறான உள்ளடக்கத்தை உருவாக்கி பரப்புவது தொடர்பாக நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரி ஸ்மிதா சபர்வால் பகிர்ந்த ஏ.ஐ செயற்கை தொழில்நுட்ப படத்தில், இரண்டு மான்கள் மற்றும் ஒரு மயில், ஜே.சி.பி உள்ளிட்ட கருவிகளைக எதிர்கொள்ளும் வகையில் உள்ளது.
நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காவை மேம்படுத்துவதற்காக சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த இந்த பகுதியை ஏலம் விட தெலுங்கானா அரசு முன்மொழிந்து உள்ளது.
இதற்கு மாணவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாணவர் சங்கத்தின் தலைமையில் போராட்டங்கள் நடந்துவருகின்றன. மேலும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இந்தத் திட்டத்தை எதிர்த்துள்ளனர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளனர்.
இதற்கிடையில், காஞ்சா கச்சிபவுலியில் உள்ள 400 ஏக்கர் நிலம் அரசுக்குச் சொந்தமானது என்று ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசு கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தற்போது தெலுங்கானா உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நீதித்துறை பரிசீலனையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு; ஐ.பி.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com