பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு; ஐ.பி.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு!

Case registered against IPS officer: திருமண ஆசை காட்டி மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஐபிஎஸ் அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published on: April 16, 2025 at 5:28 pm

Updated on: April 16, 2025 at 5:31 pm

நாக்பூர், ஏப்.16 2025: மகாராஷ்டிராவின் நாக்பூரில் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து 28 வயதான பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக 30 வயது ஐபிஎஸ் அதிகாரி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தத் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஏப்.11ஆம் தேதி நாக்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஐ.பி.எஸ் அதிகாரி மீது பாலியல் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இது தொடர்பான புகாரில், “ஐ.பி.எஸ் அதிகாரி 2022ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமானார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது குற்றஞ்சாட்டப்பட்ட நபர் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) தேர்வுகளுக்குத் தயாராகி வந்துள்ளார். அதே நேரத்தில் அந்தப் பெண் எம்பிபிஎஸ் படிப்பைத் தொடர்ந்துள்ளார். இந்நிலையில், இருவரும் நண்பர்களான பிறகு ஐ.பி.எஸ் அதிகாரி அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, அவருடன் உடல் ரீதியான உறவு கொண்டுள்ளார்.

பின்னர் திருமணத்துக்கு மறுத்துவிட்ட நிலையில், அவருடனான தொடர்பையும் துண்டித்துவிட்டார். மேலும், ஐ.பி.எஸ் அதிகாரியின் வீட்டில் உள்ள நபர்களும் பெண் மருத்துவருடன் பேச மறுத்துவிட்டனர். இந்த நிலையில், இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ஐ.பி.எஸ் அதிகாரி மீது, போலீஸ் அதிகாரிகள் பாலியல் வன்புணர்வு வழக்கு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; 8 பேர் கைது, இருவர் தலைமறைவு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com