இந்திய தொழிலதிபர் அதானி மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டிய நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இந்திய தொழிலதிபர் அதானி மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டிய நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
Published on: November 21, 2024 at 11:30 pm
Updated on: November 21, 2024 at 11:32 pm
Rahul Gandhi attacked Adani இந்திய தொழிலதிபர் மீது அமெரிக்க பங்குச் சந்தை நிறுவனம் லஞ்ச குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதாவது, அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி வரை அதானி லஞ்சம் கொடுக்க முயன்றார் என்றும் பங்குச் சந்தை முதலீட்டாளர்களை ஏமாற்றினார் என்றும் கூறியுள்ளது.
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “அதானியை கைது செய்ய வேண்டும்” என்றார். மேலும், “எங்கு ஊழல் நடந்தாலும் விசாரணை நடத்த வேண்டும். அதானியிடம் விசாரணை தொடங்கும். அவர் கைது செய்யப்படாவிட்டால், அது நம்பத்தகுந்ததாக இருக்காது.
எனவே, அங்கிருந்து தொடங்குங்கள். அதானியை கைது செய்து, விசாரித்து பின் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுங்கள். கடைசியில் நரேந்திர மோடியின் பெயர் வெளிவரும்.
ஏனென்றால் பாஜகவின் நிதி அமைப்பு முழுவதும் அவர் கையில்தான் உள்ளது. அதனால், பிரதமர் விரும்பினாலும், அவரால் எதுவும் செய்ய முடியாது. ஒருவகையில் அதானி நாட்டையே அபகரித்து விட்டது. இந்தியா அதானியின் பிடியில் சிக்கியுள்ளது” என்றார்.
பா.ஜ.க. எம்.பி பதில்
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய பா.ஜ.க. எம்.பி. பத்ரா, “கோவிட் -19 காலகட்டத்தில் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து ராகுல் காந்தி இதேபோல் பரபரப்பாக பேசினார். ஆனால் இறுதியில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டியிருந்தது” என்றார்.
இதையும் படிங்க அஸ்ஸாம், ‘கரீம்கஞ்ச்’, ‘ஸ்ரீ பூமி’ என மாற்றம்: புதிய பெயர் வரலாறு தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com