Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!
India 76th Republic Day: நாட்டின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, மிகப்பெரிய அணிவகுப்பு டெல்லியில் இன்று நடந்தது. முன்னதாக தேசிய போர் நினைவு சின்னத்தில் பிரதமர்…
Republic Day 2025 | குடியரசு தினம் 2025ஆம் ஆண்டுக்கான அணிவகுப்புக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் பெறுவது எப்படி என்பது இங்குள்ளன….
Bhandara Factory Blast: மகாராஷ்டிரா மாநிலம் பந்தாராவில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர் என முதல் கட்ட…
Encounter in Chhattisgarh : சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்ட்டர் நடவடிக்கையில் 14 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்….
kerala Minor girl Rape case : கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்….
Naxals shot dead in Chhattisgarh | சத்தீஸ்கரின் தெற்கு பிஜாப்பூரில் உள்ள ஒரு காட்டில் காலை 9 மணியளவில் துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில், …
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்