Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!
Womens Reservation Bill : நாடாளுமன்றத்தில் மகளிர் மசோதா தோல்வி அடைந்த நிலையில், திமுக, காங்கிரஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்….
Women’s Quota Bill Sparks Clash : மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி அடைந்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுககு ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கண்டனம்…
Shambhavi Choudhary : மு.க. ஸ்டாலின் வடக்கு-தெற்குப் பிளவை உருவாக்க முயற்சிக்கிறார் என்று எல்ஜேபி (ராம் விலாஸ்) எம்.பி. ஷாம்பவி சௌத்ரி தெரிவித்தார்….
Narendra Modi: பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினார்; அப்போது, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ‘தடையற்ற கப்பல் போக்குவரத்து குறித்து…
Priyanka Gandhi: சாணக்கியர் இன்று உயிரோடு இருந்திருந்தால் அதிர்ச்சி அடைந்திருப்பார் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்….
Delimination Bill 2026: மகளிர் மசோதாவுக்காக நீண்ட காலமாக பெண்கள் காத்திருந்தார்கள் என பா.ஜ.க எம்.பி ரேகா சர்மா கூறினார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்