Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!
Ajit’s wife as deputy CM: மராட்டிய மாநிலத்தின் துணை முதலமைச்சராக அஜித் பவார் மனைவி தேர்வாகியுள்ளார்….
Rain alert: டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.7°C ஆகக் குறைந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐ.எம்.டி) மழை, பனிமூட்டம் மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு மஞ்சள்…
Delhi SWAT cop Kajal Chaudhary Dead: டெல்லி ஸ்வாடு கமாண்டர் பெண் போலீஸ் காஜல் சௌதாரி மரணத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன….
Sharad Pawar: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பை அஜித் பவார் விரும்பினார் என ஷரத் பவார் தெரிவித்துள்ளார்….
Baramati Plane Crash: அஜித் பவர் பயணித்த விமானம், விழுந்து நொறுங்கியதில் அந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தார்கள்….
Economic Survey 2025-26: “இந்தியாவின் பொருளாதார ஆய்வறிக்கை சவாலான சூழ்நிலையிலும் நாட்டின் சீர்திருத்த முயற்சிகள் மற்றும் நிலையான முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது” என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்