கனடா இந்துக் கோவில் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

Narendra Modi | கனடாவில் உள்ள இந்துக்கோவில் தாக்கப்பட்ட விவகாரத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: November 4, 2024 at 11:46 pm

Updated on: November 4, 2024 at 11:47 pm

Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!

ஆளுநர் நிகழ்வில் வந்தே மாதரம் பாடலுக்கு முதல் உரிமை? மத்திய அரசின் 2026 பிப்ரவரி உத்தரவு என்ன? Vande Mataram

ஆளுநர் நிகழ்வில் வந்தே மாதரம் பாடலுக்கு முதல் உரிமை? மத்திய அரசின் 2026

Vande Mataram: 2026 பிப்ரவரி மாதத்தில் வெளியான வந்தே மாதரம் தொடர்பான மத்திய அரசின் உத்தரவு என்ன தெரியுமா?…

வெளுத்து வாங்கிய கனமழை.. திடீர் வெள்ளக்காடாய் காட்சியளித்த டெல்லி! Delhi Downpour Explained

வெளுத்து வாங்கிய கனமழை.. திடீர் வெள்ளக்காடாய் காட்சியளித்த டெல்லி!

Delhi Downpour Explained : டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை கொட்டித் தீர்த்தது; இதனால் டெல்லியின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளித்தன….

2028 சட்டமன்ற தேர்தலில் போட்டி இல்லை.. கனத்த இதயத்துடன் சித்த ராமையா! Karnataka Polls Minus Siddaramaiah

2028 சட்டமன்ற தேர்தலில் போட்டி இல்லை.. கனத்த இதயத்துடன் சித்த ராமையா!

Karnataka Polls Minus Siddaramaiah : 2028 கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா அறிவித்துள்ளார்….

பெண் பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை.. தெலங்கானா ஐ.பி.எஸ் அதிகாரி மாயம்! IPS Trainee Wanted in Telangana

பெண் பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை.. தெலங்கானா ஐ.பி.எஸ் அதிகாரி மாயம்!

IPS Trainee Wanted in Telangana : பெண் பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தேடப்பட்டுவரும் ஐ.பி.எஸ் அதிகாரி மாயமானார்….

டெல்லி மாணவர்கள் மீது தடியடி.. உச்ச நீதிமன்றம் கண்டனம்! Karur Stampede

டெல்லி மாணவர்கள் மீது தடியடி.. உச்ச நீதிமன்றம் கண்டனம்!

Supreme Court : டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது….

சி.ஜே.பி போராட்டம் நம்பிக்கை அளிக்கிறது.. இந்திய இளைஞர்களுக்கு துணை நிற்கிறேன்.. கிரேட்டா தன்பெர்க்! Greta Thunberg

சி.ஜே.பி போராட்டம் நம்பிக்கை அளிக்கிறது.. இந்திய இளைஞர்களுக்கு துணை நிற்கிறேன்.. கிரேட்டா தன்பெர்க்!

Greta Thunberg: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம் நம்பிக்கை அளிக்கிறது; இந்திய இளைஞர்களுக்கு துணையாக நிற்கிறேன் என இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் தெரிவித்துள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com