Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!
SC and ST Quotas: “பட்டியல் மற்றும் பழங்குடி சமூகங்களின் பின்தங்கிய நிலை, பொருளாதார அடிப்படையிலானது அல்ல, வரலாற்று ரீதியான சமூக பின்தங்கிய நிலை” என மத்திய…
Jharkhand students protest: ஜார்க்கண்டில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி விரட்டியடித்தனர்….
Rain Alert : கிழக்கு ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு மத்தியப் பிரதேசத்தில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய…
Har Ghar Tiranga: ‘ஹர் கர் திரங்கா’ இயக்கத்தில் மக்கள் உற்சாகமாக பங்கேற்று, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான கூட்டு உறுதியை புதுப்பிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர…
Shoes, Mud Thrown at Mamata : திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி மீது செருப்பு மற்றும் சகதி வீசப்பட்ட சம்பவம் பெரும்…
Delhi High Court : டெல்லியில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் கைதான இளம் பெண்ணுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்