Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!
Delhi Downpour Explained : டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை கொட்டித் தீர்த்தது; இதனால் டெல்லியின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளித்தன….
Karnataka Polls Minus Siddaramaiah : 2028 கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா அறிவித்துள்ளார்….
IPS Trainee Wanted in Telangana : பெண் பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தேடப்பட்டுவரும் ஐ.பி.எஸ் அதிகாரி மாயமானார்….
Supreme Court : டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது….
Greta Thunberg: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம் நம்பிக்கை அளிக்கிறது; இந்திய இளைஞர்களுக்கு துணையாக நிற்கிறேன் என இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் தெரிவித்துள்ளார்….
CJP Protest: சி.ஜே.பி (CJP) போராட்டத்தின் போது ‘பெல்லட் துப்பாக்கி’ பயன்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மக்களவையில் கேள்வி எழுப்பினர்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்