Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!
Delhi Red Alert: தேசிய தலைநகர் டெல்லியில் கனமழை காரணமாக, ஆங்காங்கே நீர் வெள்ளம் போல் ஓடியது….
Mohan Bhagwat : ஜனநாயகத்தில் போராட்டமும் ஒருவித உரையாடலே எனத் தெரிவித்துள்ளார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்….
Kerala : கேரளத்தில் கடந்த 11 ஆண்டுகளில் 469 மீனவர்கள் மரணம் அடைந்துள்ளார்கள். மேலும், 160 பேரை காணவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது….
Handloom Day: தேசிய கைத்தறி தினத்தையொட்டி, தங்கள் கைகளால் துணிகளை உருவாக்கும் ஏழை நெசவாளர் குடும்பங்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பிரதமர்…
Prashant Kishor: மூன்று தசாப்தங்களாகத் தனது கோட்டையாகத் திகழ்ந்த பாங்கிபூர் தொகுதியில், பிரசாந்த் கிஷோரிடம் 19,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோல்வியடைந்துள்ளது….
Varanasi: இந்தியாவின் புனித நகரமாக கருதப்படும் வாரணாசியில் 1,000 ஆண்டுகள் பழைமையான எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது; இங்கு எந்த மாதிரியான கலாசாரம் இருந்திருக்கும்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்