Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!
Pachmarhi gangrape case; மத்திய பிரதேசத்தில் 17 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்….
Gang Rape: கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்களுக்கு மரண தண்டனை அல்லது சாகும் வரை ஜெயில் உள்ளிட்ட தண்டனையை வழங்குமாறு நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டுள்ளது….
Supreme Court: மத்திய அரசு, OBC இடஒதுக்கீட்டில் கிரிமீலேயர் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தத் தயாராக இருந்தபோதும், சட்டரீதியான சிக்கல்கள் மற்றும் எதிர்கால விளைவுகளை கருத்தில் கொண்டு…
Onion Express Train: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து சென்னைக்கு வெங்காய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது….
Rahul Gandhi PM candidate; ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் அதில் எந்த குழப்பமும் இல்லை என காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்….
Pulwama attack case ; 2019-ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்