Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!
IMD Alert : தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், குஜராத், ராஜஸ்தான், கொங்கண் உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம்…
Haridwar: கோவில் அருகே கொன்று புதைக்கப்பட்ட இரு சாதுக்கள்; ஹரித்வார் அருகே நடந்தது என்ன?…
CJP removes spokesperson Vijeta Dahiya : “எனக்கு பசித்தது, ஆகையால் பர்கர் சாப்பிட்ட சென்றேன் என டெல்லி போராட்டத்தில் கலந்துகொண்ட கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி செய்தித்…
Rahul Gandhi urges PM Modi to resign : பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
CJP Protest : லடாக் சமூக செயற்பாட்டாளர் சோனாம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்றலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது….
Supreme Court Of India : ராமர் கோவில் நன்கொடை விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்