Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!
Crocodile Rescue: குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, வீட்டின் குளியலறைக்குள் புகுந்த 7 அடி நீள முதலை வனத்துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு…
AP Airport : ஆந்திரப் பிரதேசம் விஜயநகரம் மாவட்டம் போகாபுரத்தில் ரூ.5,640 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி…
Exam Act: பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க கடும் தண்டனைகள் மற்றும் விரைவு நீதிமன்றங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களைக் கொண்ட சட்டத் திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி…
PM Modi Message: டெல்லி மாணவர்கள் போராட்டத்தின் போது சிலர் கடுமையான அவதூறு வார்த்தைகளால் பிரதமர் நரேந்திர மோடியை திட்டினார்கள். இதுகுறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி,…
Bhiwandi Building Collapse : மகாராஷ்டிராவின் பிவாண்டியில் பழுதுபார்ப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்….
Heavy rain warning for Gujarat: குஜராத்தின் 13 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அடுத்த 48 மணி நேரம்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்