Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!
Mamata Banerjee: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னம் முடக்கப்பட்டதை எதிர்த்து மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளார்….
Rahul Gandhi: வாக்கு திருட்டு, அரசு திருட்டை தொடர்ந்து தற்போது கட்சியின் சின்னம் திருடப்பட்டுள்ளது என ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்….
Delhi Rape-Murder: டெல்லியில் 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….
Telangana: தெலுங்கானாவில் 24 கேரட் தங்க விநாயகர் மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது….
BJP Leads Rajasthan: ராஜஸ்தான் மாநில உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகிக்கிறது; இக்கட்சி ஜெய்ப்பூரை கைப்பற்றி உள்ளது….
Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கிடம் “வேறுபாடுகள் வாதமாக மாறக்கூடாது” என்று வலியுறுத்தி, எல்லை அமைதி தான் இரு நாடுகளின் உறவுகளுக்கான…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்