கனடா இந்துக் கோவில் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

Narendra Modi | கனடாவில் உள்ள இந்துக்கோவில் தாக்கப்பட்ட விவகாரத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: November 4, 2024 at 11:46 pm

Updated on: November 4, 2024 at 11:47 pm

Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!

காதல், இழப்பு, அரசியல்.. பிரதமர் பதவியை ஏற்க மறுத்தது ஏன்? சோனியா காந்தி சுயசரிதை சொல்வது என்ன? Sonia Gandhi

காதல், இழப்பு, அரசியல்.. பிரதமர் பதவியை ஏற்க மறுத்தது ஏன்? சோனியா காந்தி

Sonia Gandhi: காதல், இழப்பு மற்றும் அரசியல் நுழைவு, பிரதமர் பதவியை ஏற்க மறுத்தது என சோனியா காந்தி சுயசரிதையில் பல்வேறு செய்திகள் உள்ளன….

‘ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் பகுதி’.. காஷ்மீர் விவகாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிய அமெரிக்கா? Jammu and Kashmir

‘ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் பகுதி’.. காஷ்மீர் விவகாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிய அமெரிக்கா?

Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் முக்கியமான பகுதி என அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மீதான நிலைப்பாட்டை மாற்றியதா அமெரிக்கா?…

பெண் எம்.பி மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக கைது வாரண்ட்.. புகார் என்ன? Mahua Moitra

பெண் எம்.பி மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக கைது வாரண்ட்.. புகார் என்ன?

Mahua Moitra: கிருஷ்ணாநகர் எம்பி மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது….

ரயில் நிலைய குடிநீரில் இ.கூலி பாக்டீரியா? சி.ஏ.ஜி-யின் கவலைக்குக் காரணம் என்ன? E. coli

ரயில் நிலைய குடிநீரில் இ.கூலி பாக்டீரியா? சி.ஏ.ஜி-யின் கவலைக்குக் காரணம் என்ன?

E. coli: ஆய்வு செய்யப்பட்ட ரயில் நிலையங்களில் 11% மட்டுமே அனைத்து அடிப்படை வசதி விதிமுறைகளையும் பூர்த்தி செய்துள்ளன. குடிநீரின் தரம், தாமதமாகும் பணிகள் மற்றும் அதிகரித்து…

ரயில்களில் அங்கீகரிக்கப்படாத குடிநீர் பாட்டில்கள்.. சோதனையை தீவிரப்படுத்தும் ஐ.ஆர்.டி.சி! IRCTC

ரயில்களில் அங்கீகரிக்கப்படாத குடிநீர் பாட்டில்கள்.. சோதனையை தீவிரப்படுத்தும் ஐ.ஆர்.டி.சி!

IRCTC: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அங்கீகரிக்கப்படாத உணவு மற்றும் பானங்களின் விற்பனையைத் தடுக்க சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com