Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!
Kiren Rijiju: நீட் தேர்வு குறித்து விவாதிக்க வாருங்கள்; பிரச்னையை திசை திருப்ப வேண்டாம் என எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் கிரண் வேண்டுகோள் விடுத்துள்ளார்….
Lok Sabha Adjournment : பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 4ஆம் நாளான இன்றும் (ஜூலை 23, 2026) மக்களவை முடக்கப்பட்டது; எதிர்க்கட்சிகள், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
CJP: காக்ரோச் ஜனதா பார்ட்டி போராட்டம் குறித்து என்.ஐ.ஏ விசாரணை நடத்தக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது….
Raj Thackeray: மும்பை போராட்டத்துக்கு யாரும் இடையூறு செய்தால் அடித்து துவைப்போம் என மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே மிரட்டல் விடுத்துள்ளார்….
CJP: ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் “இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்கள் தப்ப முடியாது” என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ள நிலையில், இதற்குப் பொறுப்பேற்று மத்திய…
Narendra Modi: ‘நீட்’ தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடுபவர்கள் எவரும் தப்ப…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்