Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!
FCRA Bill : வெளிநாடுகளில் இருந்து வரும் நிதியை யார் கட்டுப்படுத்துகிறார்கள்? எஃப்.சி.ஆர்.ஏ, விவகாரத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பாஜகவின் மசோதாவை எதிர்ப்பது ஏன்?…
Punjab Gov Employees’ Protest : பஞ்சாபில், அரசு ஊழியர்களின் போராட்டம் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது….
Bihar By-Election: பிராமணர் உள்ளிட்ட சமூகங்களின் அழுத்தத்தை பாரதிய ஜனதா கட்சி எதிர்கொண்டு வருவதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்….
Rain Alert: ராஜஸ்தான் மற்றும் ஒடிசாவில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு,…
FCRA Amendment Bill : வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா தொடர்பாக அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய எதிர்ப்பை இந்தியா நிராகரித்துள்ளது. இந்தியாவின் சட்டமன்ற நடவடிக்கைகள்…
Delhi Red Alert: தேசிய தலைநகர் டெல்லியில் கனமழை காரணமாக, ஆங்காங்கே நீர் வெள்ளம் போல் ஓடியது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்