Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!
Bihar Floods: பீகாரில் கங்கை உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் தொடர்ந்து அபாய அளவைத் தாண்டி ஓடுவதால் வெள்ள நிலைமை தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில், சோன் ஆற்றில் நீர்வரத்து…
Coin Seizure: தோஹாவில் இருந்து டெல்லி வந்த 2 பயணிகளிடம் இருந்து 47.16 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்…
Gurpreet Singh Sekhon AAP: பஞ்சாப் 2027 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காங்க்ஸ்டர்-மாற்றிய அரசியல்வாதி குர்ப்ரீத் சிங் சேகோன், ஆம் ஆத்மி கட்சியில் (AAP) இணைந்துள்ளார்….
Siddaramaiah 75% reservation proposal: பெங்களூருவில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் பேசிய அவர், “இது வெறும் அரசியல் கோரிக்கை அல்ல; சமூக சமநிலையை நிலைநிறுத்தும் அவசியமான…
Delhi Police facial recognition; ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில், முகம் அடையாளம் காணும் கேமரா தொழில்நுட்பத்தின் மூலம், குற்றவாளிகள் சிலர் கண்டறியப்பட்டுள்ளனர்….
Varanasi Skeleton : வாரணாசியில் 1957-ல் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு தொடர்பான ஆய்வுகள் தற்போது புதிய பரிமாணத்தை எட்டி உள்ளன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்