Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!
IRCTC: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அங்கீகரிக்கப்படாத உணவு மற்றும் பானங்களின் விற்பனையைத் தடுக்க சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது….
Smriti Irani: பாஜக அமைப்பில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில், ஸ்மிரிதி இரானி முக்கிய பொறுப்பில் சேர்க்கப்பட்டுள்ளார்….
Gandhi–Ambedkar Clash : பட்டியலின சமூகங்களுக்கு தனித் தொகுதிகள் உருவாக்கப்பட்டபோது, இது இந்து சமூகத்தை மேலும் பிளவுபடுத்தும் என காந்திஜி எதிர்ப்பு தெரிவித்தார்; அதே நேரம், சட்ட…
Rahul Gandhi Assets Case : காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…
Jharkhand student protests; ஜார்கண்டில், மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு தேர்வர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் முதலமைச்சர் பதவி விலக நேரிடும் என மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்….
Dimagi Naxals debate ; மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, சுதந்திர தினத்தை முன்னிட்டு, “திமாகி நக்சல்கள்” எனப்படும் சிலரை பட்டியலிட்டார். இது தொடர்பாக பதிலளித்துள்ளார்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்