Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!
Cauvery Water Row : தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கர்நாடகா…
Naxalbari Uprising : நக்சல்பாரி கிளர்ச்சி 1967ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் நடந்தது. அப்போது, நிலம் மற்றும் விவசாய உரிமைக்காக ஆயுதப் போராட்டம் தொடங்கப்பட்டது….
Marital Rape Exception: உச்ச நீதிமன்றம், திருமண பாலியல் வன்முறை (Marital Rape) தொடர்பான சட்டப்பிரிவை குறித்து முக்கியமான கேள்வி எழுப்பியுள்ளது….
Yogi Adityanath: உத்தரப்பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, முதல்வர் யோகி ஆதித்யநாத், எதிர்க்கட்சிகளின் (சமாஜ்வாதி கட்சி-காங்கிரஸ்) ஆதிக்கம் கொண்ட 115 தொகுதிகளில் தீவிரமாக செயல்படுகிறார்….
Bihar Floods: பீகாரில் கங்கை உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் தொடர்ந்து அபாய அளவைத் தாண்டி ஓடுவதால் வெள்ள நிலைமை தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில், சோன் ஆற்றில் நீர்வரத்து…
Coin Seizure: தோஹாவில் இருந்து டெல்லி வந்த 2 பயணிகளிடம் இருந்து 47.16 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்