Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!
Finance & Appropriation Bills Cleared: பாராளுமன்றம் நிதி மசோதா மற்றும் ஒதுக்கீட்டு மசோதா 2026-ஐ அங்கீகரித்துள்ளது….
Indian Railways Honors Heroes with Free Travel: வீரச்சேவா விருது பெற்றவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் முதல் வகுப்பு மற்றும் ஏ.சி. பயணத்தில் இலவசச் சலுகையை இந்திய…
Karnataka Online Gambling Suicide: கர்நாடகாவில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான மருத்துவ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்…
Sonia Gandhi Health condition: சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை புதுடெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது….
Supreme Court Of India: ஒருவர் மதம் மாறினால் எஸ்.சி (பட்டியல் சமூக சாதி) அந்தத்தை இழக்கக்கூடும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது….
Narendra Modi: மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதல், இந்தியாவுக்கு முன்னெப்போதும் இல்லாத சவால்களை உருவாக்கியுள்ளது என்று பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்