Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!
1990 Nurse Killing case : 1990 இல் காஷ்மீரி பண்டிட் செவிலியர் படுகொலை வழக்கில் யாசின் மாலிக் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது….
Ayodhya Ram Temple : அயோத்தி ராமர் கோவில் கையாடல் விவகாரத்தில் 8 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது; இந்த எட்டு பேருக்கு ஆதரவாக…
Ketan Agarwal Murder Case : புனேயில் நடந்த கொலை வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன….
Uddhav Thackeray : என் சிறகுகளை யாராலும் வெட்ட முடியாது என உத்தரவ் தாக்கரே கூறியுள்ளார்….
Fire at Noida Housing Society : நொய்டா ‘அரண்யா சொசைட்டி’ குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த குடியிருப்பாளர்கள் பதற்றத்துக்கு உள்ளாகினார்கள்….
‘School Chalo’ Awareness Campaign : உத்தரப் பிரதேசத்தில் பள்ளிக்கு செல்வோம் இரண்டாம் கட்ட விழிப்புணர்வை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்