கனடா இந்துக் கோவில் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

Narendra Modi | கனடாவில் உள்ள இந்துக்கோவில் தாக்கப்பட்ட விவகாரத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: November 4, 2024 at 11:46 pm

Updated on: November 4, 2024 at 11:47 pm

Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!

லடாக்கில் திடீர் ஹெலிகாப்டர் விபத்து.. உயிர் பிழைத்த 3 அதிகாரிகள்.. பகீர் தகவல்கள்! Ladakh Chopper Mishap

லடாக்கில் திடீர் ஹெலிகாப்டர் விபத்து.. உயிர் பிழைத்த 3 அதிகாரிகள்.. பகீர் தகவல்கள்!

Ladakh Chopper Mishap : லடாக்கில் இந்திய இராணுவ ஹெலிகாப்டர் விபத்து சிக்கியது. இதில், மூன்று அதிகாரிகள் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தனர்….

திரிணாமுல் காங்கிரஸ் ஐஸ்-ஐ விட வேகமாக உருகிறது.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் TMC Melting

திரிணாமுல் காங்கிரஸ் ஐஸ்-ஐ விட வேகமாக உருகிறது.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

TMC Melting : மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஐஸ்-ஐ விட வேகமாக உருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது….

எபோலா எதிரொலி: டெல்லி விமான நிலையத்தில் தீவிர சுகாதார பரிசோதனை Ebola Virus

எபோலா எதிரொலி: டெல்லி விமான நிலையத்தில் தீவிர சுகாதார பரிசோதனை

Ebola Virus: எபோலா வைரஸ் பரவல் உலக நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தி வருவதன் எதிரொலியாக டெல்லி விமான நிலையத்தில் தீவிர சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது….

இது புதிய இந்தியா.. அணு ஆயுத மிரட்டல் எடுபடாது.. ராஜ்நாத் சிங் Rajnath Singh in Seoul

இது புதிய இந்தியா.. அணு ஆயுத மிரட்டல் எடுபடாது.. ராஜ்நாத் சிங்

Rajnath Singh in Seoul : இது புதிய இந்தியா எனக் குறிப்பிட்டுள்ள ராஜ்நாத் சிங், அணு ஆயுத மிரட்டல்கள் இங்கு எடுபடாது எனவும் தெரிவித்துள்ளார்….

டெல்லியில் வெப்ப அலை.. ஆரஞ்சு எச்சரிக்கை.. இந்திய வானிலை ஆய்வு மையம்! Delhi Heatwave Orange Alert

டெல்லியில் வெப்ப அலை.. ஆரஞ்சு எச்சரிக்கை.. இந்திய வானிலை ஆய்வு மையம்!

Delhi Heatwave Orange Alert : டெல்லியில் வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com