கனடா இந்துக் கோவில் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

Narendra Modi | கனடாவில் உள்ள இந்துக்கோவில் தாக்கப்பட்ட விவகாரத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: November 4, 2024 at 11:46 pm

Updated on: November 4, 2024 at 11:47 pm

Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!

ராகவ் சத்தாவை தோளில் தூக்கிய அரவிந்த் கெஜ்ரிவால்.. பூசாரி பகிர்ந்த திருமண விழா சுவாரஸ்யம்! Inside Stories from Raghav’s Wedding

ராகவ் சத்தாவை தோளில் தூக்கிய அரவிந்த் கெஜ்ரிவால்.. பூசாரி பகிர்ந்த திருமண விழா

Inside Stories from Raghav’s Wedding : ராகவ் சத்தா திருமண நிகழ்வின்போது அவரை, அரவிந்த் கெஜ்ரிவால் தோளில் தூக்கி சுமந்துள்ளார். இந்தத் தகவலை பூஜாரி பகிர்ந்துக்கொண்டார்….

மோடியை பாம்பாட்டியாக சித்தரிப்பு.. நார்வே பத்திரிகை இனவெறி கார்ட்டூன்! India Slams Norway Cartoon

மோடியை பாம்பாட்டியாக சித்தரிப்பு.. நார்வே பத்திரிகை இனவெறி கார்ட்டூன்!

India Slams Norway Cartoon : நார்வேயில், பிரதமர் நரேந்திர மோடியை பாம்பாட்டியாக சித்தரித்து வெளியான கார்ட்டூன் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது….

அமைதியான போராட்டம் உரிமை.. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி SC CJI

அமைதியான போராட்டம் உரிமை.. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

SC CJI: “அமைதியான போராட்டம் உரிமை. ஆனால்,” என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்துள்ளார்….

வாக்தேவி சிலை கோஹினூரை விட முக்கியம்.. லண்டனில் இருந்து மீட்க மனு! Vagdevi Idol Return

வாக்தேவி சிலை கோஹினூரை விட முக்கியம்.. லண்டனில் இருந்து மீட்க மனு!

Vagdevi Idol Return : வாக்தேவி சிலையை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது; மனுதாரர்கள் இந்தச் சிலை கோஹினூர் வைரத்தை விட முக்கியம் எனத் தெரிவித்துள்ளனர்….

மருத்துவர் சுப்பையா கொலை.. குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை.. உச்ச நீதிமன்றம் Dr subbiah murder case

மருத்துவர் சுப்பையா கொலை.. குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை.. உச்ச நீதிமன்றம்

Dr subbiah murder case: மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com