Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!
puducherry Election 2026: புதுச்சேரி அரசியலில் லட்சிய ஜனநாயக கட்சி தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து வருகிறது. இந்தக் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது….
Mallikarjun kharge: முன்னாள் பிரதமர் தேவேக விழாவின் மாநிலங்களவை பதவி நிறைவடைந்துள்ள நிலையில் அவரின் பிரிவு உபசார விழாவில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகா…
Kangana Ranaut Slams Rahul Gandhi: ராகுல் காந்தி, தெருக்களில் சுற்றித் திரியும் இளைஞர் போல் பொறுப்பில்லாமல் பாராளுமன்றத்தில் வலம் வருகிறார் என நடிகையும், பா.ஜ.க. எம்.பி.யுமான…
Delhi Fire Near Palam Metro: டெல்லி பாலம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் சிக்கியுள்ளனர். மீட்பு…
Iran Israel War: ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியக் கப்பல்கள் செல்ல நிரந்தர ஒப்பந்தம் எதுவும் இல்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்….
Odisha Hospital Fire Accident: ஒடிசா மாநிலம் கட்டக் நகரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்