Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!
Sonia Gandhi: காதல், இழப்பு மற்றும் அரசியல் நுழைவு, பிரதமர் பதவியை ஏற்க மறுத்தது என சோனியா காந்தி சுயசரிதையில் பல்வேறு செய்திகள் உள்ளன….
Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் முக்கியமான பகுதி என அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மீதான நிலைப்பாட்டை மாற்றியதா அமெரிக்கா?…
Mahua Moitra: கிருஷ்ணாநகர் எம்பி மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது….
Kolkata hotel fire accident: கொல்கத்தா ஹோட்டலில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலியானார்கள்….
E. coli: ஆய்வு செய்யப்பட்ட ரயில் நிலையங்களில் 11% மட்டுமே அனைத்து அடிப்படை வசதி விதிமுறைகளையும் பூர்த்தி செய்துள்ளன. குடிநீரின் தரம், தாமதமாகும் பணிகள் மற்றும் அதிகரித்து…
IRCTC: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அங்கீகரிக்கப்படாத உணவு மற்றும் பானங்களின் விற்பனையைத் தடுக்க சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்