Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!
Bodh Gaya Act : 1949-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தின் கீழ், பீகாரில் உள்ள மகாபோதி கோயிலின் நிர்வாகத்தில் இந்துக்களும் பங்கேற்கின்றனர்….
Rahul Gandhi in Savarkar Row : சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்துகள் தொடர்பான அவதூறு வழக்கு புகாரை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது….
Uttarakhand Tunnel Tragedy : உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் நீர்மின் திட்ட சுரங்கத்துக்குள் திடீரென தண்ணீர் மற்றும் இடிபாடுகள் புகுந்ததில் 7 தொழிலாளர்கள்…
Rahul Gandhi: ராகுல் காந்தி சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது….
Monsoon Session 2026: மழைக்கால கூட்டத்தொடர் 2026 இன்று (வியாழக்கிழமை) நிறைவு பெறுகிறது; கனிமம், சுரங்கம் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது….
Amit Shah: உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளிக்க வேண்டும் என ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்திய நிலையில், ‘ பதிலளிக்க…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்