Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!
Thirukkural in Russian: பிரதமர் நரேந்திர மோடி, BRICS உச்சி மாநாட்டுக்கு முன்னதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு தமிழ் இலக்கியத்தின் சிறந்த படைப்பான திருக்குறள் நூலின்…
Xi Jinping: சீன அதிபர் ஷி ஜின்பிங், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்துள்ளார். அவர் நியூடெல்லியில் நடைபெறும் BRICS உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இதன் போது,…
BRICS Summit: இந்தியாவில் நடைபெறும் BRICS உச்சி மாநாட்டில் உலகின் முக்கிய தலைவர்கள் ஒன்று கூடுகின்றனர்….
Nitin Nabin: பட்டியல் இனத்தை அவமதித்தது காங்கிரஸ்; இதற்கு வரலாறு இருக்கு என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் இதில் நவீன் தெரிவித்துள்ளார்….
Mayawati: பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதி, தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தின் கட்சி பங்கு மீண்டும் வழங்கப்படுவதற்கான நிபந்தனையை அறிவித்துள்ளார்….
Cauvery Water Row : தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கர்நாடகா…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்