Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!
Delhi Police facial recognition; ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில், முகம் அடையாளம் காணும் கேமரா தொழில்நுட்பத்தின் மூலம், குற்றவாளிகள் சிலர் கண்டறியப்பட்டுள்ளனர்….
Varanasi Skeleton : வாரணாசியில் 1957-ல் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு தொடர்பான ஆய்வுகள் தற்போது புதிய பரிமாணத்தை எட்டி உள்ளன….
Raghav Chadha Punjab SIR controversy: பஞ்சாப் மாநில அரசியல் சூழலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் — ராஜ்யசபா எம்.பி. ராகவ் சதா, மாநிலத்தின் வரைவு…
Delhi solar panel scheme: டெல்லி அரசு, 400 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு இலவச சோலார் பேனல்கள் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம், மின்சாரச்…
Modi on Growth: இந்தியாவின் 7.8 சதவீத பொருளாதார வளர்ச்சி 140 கோடி மக்களின் கடின உழைப்பு மற்றும் கூட்டு உறுதியின் பிரதிபலிப்பு என பிரதமர் நரேந்திர…
Rain Alert: சத்தீஸ்கரில் இன்று மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது. தமிழகம்,…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்