கனடா இந்துக் கோவில் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

Narendra Modi | கனடாவில் உள்ள இந்துக்கோவில் தாக்கப்பட்ட விவகாரத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: November 4, 2024 at 11:46 pm

Updated on: November 4, 2024 at 11:47 pm

Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!

அமித் ஷா எங்கே? தங்கள் வாயை யாராவது தைத்துவிட்டார்களா? கார்கே ஆவேசம்! Mallikarjun Kharge

அமித் ஷா எங்கே? தங்கள் வாயை யாராவது தைத்துவிட்டார்களா? கார்கே ஆவேசம்!

Mallikarjun Kharge: “உங்கள் வாயை யாராவது தைத்துவிட்டார்களா?” என மக்களவையில் மல்லிகார்ஜூன் கார்கே ஆவேசமாக பேசினார்….

மேகதாது அணை விவகாரம்: கர்நாடகாவின் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பிய மத்திய அரசு! Mekedatu Dam

மேகதாது அணை விவகாரம்: கர்நாடகாவின் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பிய மத்திய அரசு!

Mekedatu Dam : மேகதாதுவில் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் 67.14 டி.எம்.சி கொள்ளளவில் புதிய அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு தாக்கல் செய்த விரிவான திட்ட அறிக்கையை…

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் குற்றம்.. மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்! Rajya Sabha

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் குற்றம்.. மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்!

Rajya Sabha: வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் தண்டனை வழங்கும்படியான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது….

ஆர்.எஸ்.எஸ் மாணவர்களின் எதிரி.. பிரதான் ராஜினாமா மேலோட்டமானது.. ராகுல் காந்தி Rahul Gandhi

ஆர்.எஸ்.எஸ் மாணவர்களின் எதிரி.. பிரதான் ராஜினாமா மேலோட்டமானது.. ராகுல் காந்தி

Rahul Gandhi: தர்மேந்திர பிரதான் ராஜினாமா மேலோட்டமானது; ஆர்.எஸ்.எஸ் மாணவர்களின் உண்மையான எதிரி என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்….

காக்ரோச் ஜனதா பார்ட்டிக்கு சட்ட உதவி.. ரூ.1 கோடி நிதியளித்த கபில் சிபல்! Kapil Sibal

காக்ரோச் ஜனதா பார்ட்டிக்கு சட்ட உதவி.. ரூ.1 கோடி நிதியளித்த கபில் சிபல்!

Kapil Sibal: “என் தரப்பிலிருந்து நான் ரூ. 1 கோடி நிதியுதவி அளித்துள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் இந்த நிதிக்கு பங்களிக்க இந்தியா முழுவதும் உள்ள வழக்கறிஞர்களை…

‘கோமூத்திர நிபுணர்’.. மெட்ராஸ் ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடியை அவமதித்த பிரியங்கா காந்தி! Priyanka Gandhi

‘கோமூத்திர நிபுணர்’.. மெட்ராஸ் ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடியை அவமதித்த பிரியங்கா காந்தி!

Priyanka Gandhi: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மெட்ராஸ் ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடியை கோமூத்திர நிபுணர்” என விமர்சித்துள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com