கனடா இந்துக் கோவில் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

Narendra Modi | கனடாவில் உள்ள இந்துக்கோவில் தாக்கப்பட்ட விவகாரத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: November 4, 2024 at 11:46 pm

Updated on: November 4, 2024 at 11:47 pm

Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!

‘போராடுவேன் அல்லது உயிரிழப்பேன்’.. கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி பரபரப்பு பேச்சு Mamatas Kolkata Dharna

‘போராடுவேன் அல்லது உயிரிழப்பேன்’.. கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி பரபரப்பு பேச்சு

Mamatas Kolkata Dharna : போராடுவேன் அல்லது உயிரிழப்பேன் என மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்….

வர்த்தகம், பாதுகாப்பு, தொடர்பு, எல்லை பிரச்சனை.. இந்தியாவுடன் கைகோர்க்கும் மியான்மர்! Myanmar President India visit

வர்த்தகம், பாதுகாப்பு, தொடர்பு, எல்லை பிரச்சனை.. இந்தியாவுடன் கைகோர்க்கும் மியான்மர்!

Myanmar President India visit: இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராக மியான்மர் நாட்டின் நிலப்பரப்பு எந்தவிதத்திலும் பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்று மியான்மர் அதிபர் யூ மின் ஆங்…

உச்ச நீதிமன்றத்திற்கு புதிய ஐந்து நீதிபதிகள்.. யார் யார்.. முழு விவரம்! Supreme court of india

உச்ச நீதிமன்றத்திற்கு புதிய ஐந்து நீதிபதிகள்.. யார் யார்.. முழு விவரம்!

Supreme court of india: உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 5 பேர் இன்று பதவியேற்றனர். தலைமை நீதிபதி சூர்ய காந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்….

டெல்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து.. 6 பேர் உயிரிழப்பு Delhi Building Collapse

டெல்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து.. 6 பேர் உயிரிழப்பு

Delhi Building Collapse : டெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்….

வக்ஃப் சொத்துக்களை மீட்க போராட்டம்.. வழக்கறிஞர் கொலை.. காங்கிரஸ் தலைவர் கைது! Telangana Lawyer’s Murder

வக்ஃப் சொத்துக்களை மீட்க போராட்டம்.. வழக்கறிஞர் கொலை.. காங்கிரஸ் தலைவர் கைது!

Telangana Lawyer’s Murder : தெலங்கானாவில் வழக்கறிஞர் கொலை வழக்கில், மாநில காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்….

ஜம்மு காஷ்மீரில் பயங்கர காட்டுத் தீ.. பரபரப்பு வீடியோ காட்சிகள்! Forest Fires in Rajouri

ஜம்மு காஷ்மீரில் பயங்கர காட்டுத் தீ.. பரபரப்பு வீடியோ காட்சிகள்!

Forest Fires in Rajouri : ஜம்மு காஷ்மீரின் ராஜௌரி மாவட்ட காட்டில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com