Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!
Eknath Shinde: நாடாளுமன்றத்தில் ஏக்நாத் ஷிண்டே பலம் அதிகரித்துள்ளது….
Rahul Gandhi : ராமர் கோவில் நன்கொடை கையாடல் விவகாரத்தால் பக்தர்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்…
Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி, விக்ரம்-1 ராக்கெட் மூலம் “வந்தே மாதரம்” குறிப்பை விண்வெளிக்கு அனுப்பியதன் காரணத்தை விளக்கினார்….
Rajnath Singh: பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை வெறும் அறிவிப்பாக அல்ல, உறுதியான நடவடிக்கையாக பின்பற்றி வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்….
Delhi Protest: ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதத்தில் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உடல்நலக் குறைவு காரணமாக சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, காக்ரோச் ஜனதா பார்ட்டி…
Wangchuk Fast: டெல்லி ஜந்தர் மந்தரில் 20 நாட்களுக்கும் மேலாக காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், உடல்நலக் குறைவு காரணமாக வலுக்கட்டாயமாக…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்