கனடா இந்துக் கோவில் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

Narendra Modi | கனடாவில் உள்ள இந்துக்கோவில் தாக்கப்பட்ட விவகாரத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: November 4, 2024 at 11:46 pm

Updated on: November 4, 2024 at 11:47 pm

Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!

உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு.. இரு சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது? Supreme Court Chaos

உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு.. இரு சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது?

Supreme Court Chaos : இரு சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் உச்ச நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….

சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதம்.. மத்திய அரசு பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு! Sonam Wangchuk

சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதம்.. மத்திய அரசு பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு!

Sonam Wangchuk: சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டம் 18வது நாளை எட்டியுள்ளது….

நாட்டை கட்டமைக்க வாழ்வை அர்ப்பணித்தவர்.. காமராஜருக்கு பிரதமர் மோடி புகழாரம்! Narendra Modi On Kamaraj

நாட்டை கட்டமைக்க வாழ்வை அர்ப்பணித்தவர்.. காமராஜருக்கு பிரதமர் மோடி புகழாரம்!

Narendra Modi On Kamaraj : இந்திய சுதந்திர போராட்ட வீரர், நாட்டை கட்டமைக்க தன் வாழ்வை அர்ப்பணித்தவர் காமராஜர் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்…

போஜசாலா பிரச்னை.. இஸ்லாமியர்கள் தொழுக திறந்தவெளி இடம்.. உச்ச நீதிமன்றம்! Bhojshala issue

போஜசாலா பிரச்னை.. இஸ்லாமியர்கள் தொழுக திறந்தவெளி இடம்.. உச்ச நீதிமன்றம்!

Bhojshala issue : போஜசாலா விவகாரத்தில் இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த திறந்தவெளி இடம் வழங்குமாறு மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது….

2020 டெல்லி கலவரம்.. ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலர் குற்றவாளி.. நீதிமன்றம் தீர்ப்பு! 2020 Delhi riots

2020 டெல்லி கலவரம்.. ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலர் குற்றவாளி.. நீதிமன்றம் தீர்ப்பு!

2020 Delhi riots: 2020-ஆம் ஆண்டு டெல்லி கலவரத்தின்போது நடைபெற்ற அங்கித் சர்மா கொலை வழக்கில் தாஹிர் உசைனை டெல்லி நீதிமன்றம் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது….

வியட்நாம் படகு விபத்து.. தாயகம் கொண்டுவரப்பட்ட 15 இந்தியர்களின் உடல்கள்! vietnam boat tragedy

வியட்நாம் படகு விபத்து.. தாயகம் கொண்டுவரப்பட்ட 15 இந்தியர்களின் உடல்கள்!

vietnam boat tragedy : வியட்நாம் நாட்டில் படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்திய சுற்றுலாப் பயணிகளின் உடல்கள் தாயகம் கொண்டு வரப்பட்டன….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com