Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!
Kerala’s New CM : கேரளத்தின் முதல் அமைச்சராக காங்கிரஸின் வி.டி. சதீசன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரின் அமைச்சரவையில், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 5 அமைச்சர்கள்…
Delhi Metro Lift Incident Viral : டெல்லி மெட்ரோ லிப்டில் முதியவர் ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது….
Ganga Iftar Bail Order : கங்கை நதியில் அசைவ உணவுப் பொருள்களை தூக்கி எறியக் கூடாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது….
Earthquake Strikes Near Andaman : அந்தமானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது….
Population Push in Andhra : தம்பதியர் 2 முதல் 4 குழந்தைகள் வரை பெற்றுக்கொண்டால் பண உதவி வழங்கப்படும் என ஆந்திரா அரசு அறிவித்துள்ளது….
NEET Leak : நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நாட்டில் 22 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; பிரதமர் நரேந்திர மோடி மௌனமாக இருப்பது ஏன் என…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்