Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!
Teejan Bai Passes Away : பண்டவானி நாட்டுப்புறக் கலையை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற பத்ம விபூஷண் விருது பெற்ற தீஜன் பாய், 70 வயதில்…
Narendra Modi: பெரு நாட்டின் புதிய அதிபராக கெய்கோ புஜிமோரி தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்….
Uddhav Thackerey : அரசியல் கட்சிகளை பிளவுப்படுத்த, திருடப்பட்ட ராமர் கோவில் நிதி பயன்படுத்தப்பட்டது என உத்தவ் தாக்கரே குற்றஞ்சாட்டியுள்ளார்….
Heavy Rain In Uttarakhand: உத்தரகாண்டில் கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு எற்பட்டுள்ளது; இதற்கிடையில், ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது….
India, Pakistan Prisoner Exchange : இந்தியா- பாகிஸ்தான் சிறைக் கைதிகள் பரிமாற்றம் புதன்கிழமை நடைபெற்றது….
Ayothya Ram Temple Scam : ராமர் கோவில் நன்கொடை விவகாரத்தில் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் உறுதியளித்துள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்