கனடா இந்துக் கோவில் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

Narendra Modi | கனடாவில் உள்ள இந்துக்கோவில் தாக்கப்பட்ட விவகாரத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: November 4, 2024 at 11:46 pm

Updated on: November 4, 2024 at 11:47 pm

Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!

டெல்லியில் நடுரோட்டில் பயங்கரம்.. மனைவியை சுட்டுக் கொன்ற போலீஸ் கான்ஸ்டபிள்! Delhi Cop Wanted for Wife’s Murder

டெல்லியில் நடுரோட்டில் பயங்கரம்.. மனைவியை சுட்டுக் கொன்ற போலீஸ் கான்ஸ்டபிள்!

Delhi Cop Wanted for Wife’s Murder : டெல்லியில் பட்டப் பகலில் மனைவியை சுட்டுக்கொன்ற போலீஸ் கான்ஸ்டபிளை, போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்….

இந்தியா முழுக்க அரை கம்பத்தில் பறந்த தேசிய கொடிகள்.. ஏன் தெரியுமா? National flags flew at half-mast

இந்தியா முழுக்க அரை கம்பத்தில் பறந்த தேசிய கொடிகள்.. ஏன் தெரியுமா?

National flags flew at half-mast : இந்தியாவில் இன்று (திங்கள்கிழமை) தேசிய கொடி அரை கம்பத்தில் பறந்தது….

அயோத்தி நன்கொடை கையாடல்.. அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு! Ayodhya Donation Scam Case

அயோத்தி நன்கொடை கையாடல்.. அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Ayodhya Donation Scam Case : அயோத்தி நன்கொடை கையாடல் விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது….

திட்டமிட்ட கலவரம், சமூக விரோத செயல் தடுப்பு.. மேற்கு வங்கத்தில் 2 புதிய சட்டங்கள் அமல்! West Bengal public safety law

திட்டமிட்ட கலவரம், சமூக விரோத செயல் தடுப்பு.. மேற்கு வங்கத்தில் 2 புதிய

West Bengal public safety law : மேற்கு வங்கத்தில் இரண்டு புதிய சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. இந்தச் சட்டங்கள் குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க…

அரசு விழாக்களில் முதலில் மாநிலப் பாடல்.. மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய அறிவுறுத்தல் MHA Order

அரசு விழாக்களில் முதலில் மாநிலப் பாடல்.. மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய அறிவுறுத்தல்

MHA Order : அரசு நிகழ்ச்சிகளில் மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும் என உத்தரவிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது….

என் உயிர் இருக்கும்வரை… டி.எம்.சி.-யை அழிக்க முடியாது.. மம்தா பானர்ஜி Mamata Banerjee

என் உயிர் இருக்கும்வரை… டி.எம்.சி.-யை அழிக்க முடியாது.. மம்தா பானர்ஜி

Mamata Banerjee: என் உயிர் இருக்கும் வரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை அழிக்க முடியாது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com