கனடா இந்துக் கோவில் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

Narendra Modi | கனடாவில் உள்ள இந்துக்கோவில் தாக்கப்பட்ட விவகாரத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: November 4, 2024 at 11:46 pm

Updated on: November 4, 2024 at 11:47 pm

Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!

இந்தோனோசியாவில் உள்ள 10ஆம் நூற்றாண்டு சிவாலயம் புதுப்பிப்பு.. பிரதமர் மோடி! India to Restore Prambanan Temple

இந்தோனோசியாவில் உள்ள 10ஆம் நூற்றாண்டு சிவாலயம் புதுப்பிப்பு.. பிரதமர் மோடி!

India to Restore Prambanan Temple : இந்தோனேசியாவில் உள்ள 10ஆம் நூற்றாண்டு பிரம்பனன் சிவன் கோவிலை இந்தியா புதுப்பிக்க உ்ளளது….

பீகார் இடைத்தேர்தல்.. பிரசாந்த் கிஷோர் பாண்டே போட்டி! Bihar Bypoll

பீகார் இடைத்தேர்தல்.. பிரசாந்த் கிஷோர் பாண்டே போட்டி!

Bihar Bypoll : பீகார் பங்கிப்பூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் பாண்டே களம் காண்கிறார்….

போதைப் பொருள் கடத்தலை தடுக்க கூட்டு முயற்சி.. அஸ்ஸாமில் பிரிக்ஸ் கூட்டம்! BRICS Anti-Drug Agencies Meet

போதைப் பொருள் கடத்தலை தடுக்க கூட்டு முயற்சி.. அஸ்ஸாமில் பிரிக்ஸ் கூட்டம்!

BRICS Anti-Drug Agencies Meet : அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தியில் பிரிக்ஸ் நாடுகளின் போதைப்பொருள் தடுப்பு முகமைகளின் தலைவர்கள் மாநாடு (BRICS Heads of Anti-Drug Agencies…

இந்திய நாட்டுப்புறக் கலையின் அடையாளம் தீஜன் பாய் மறைவு… பிரதமர் மோடி இரங்கல் !. Teejan Bai Passes Away

இந்திய நாட்டுப்புறக் கலையின் அடையாளம் தீஜன் பாய் மறைவு… பிரதமர் மோடி இரங்கல்

Teejan Bai Passes Away : பண்டவானி நாட்டுப்புறக் கலையை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற பத்ம விபூஷண் விருது பெற்ற தீஜன் பாய், 70 வயதில்…

பெருவின் புதிய அதிபராக கெய்கோ புஜிமோரி தேர்வு : பிரதமர் மோடி வாழ்த்து Narendra Modi

பெருவின் புதிய அதிபராக கெய்கோ புஜிமோரி தேர்வு : பிரதமர் மோடி வாழ்த்து

Narendra Modi: பெரு நாட்டின் புதிய அதிபராக கெய்கோ புஜிமோரி தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்….

ஆபரேஷன் ராம் மந்திர்.. அரசியல் கட்சிகளை பிளவுப்படுத்த திருடப்பட்ட நிதி.. உத்தவ் தாக்கரே Uddhav Thackerey

ஆபரேஷன் ராம் மந்திர்.. அரசியல் கட்சிகளை பிளவுப்படுத்த திருடப்பட்ட நிதி.. உத்தவ் தாக்கரே

Uddhav Thackerey : அரசியல் கட்சிகளை பிளவுப்படுத்த, திருடப்பட்ட ராமர் கோவில் நிதி பயன்படுத்தப்பட்டது என உத்தவ் தாக்கரே குற்றஞ்சாட்டியுள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com