கனடா இந்துக் கோவில் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

Narendra Modi | கனடாவில் உள்ள இந்துக்கோவில் தாக்கப்பட்ட விவகாரத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: November 4, 2024 at 11:46 pm

Updated on: November 4, 2024 at 11:47 pm

Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (நவ. 4, 2024) டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் “இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது” என்றார். இரு தரப்புக்கும் இடையே நிலவும் இராஜதந்திர சரிவு குறித்து கருத்து தெரிவித்த மோடி, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை குறிவைத்து கண்காணிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் இதுபோன்ற செயல்களை “கோழைத்தனமானது” என்று விவரித்தார். தொடர்ந்து மோடி, “கனடாவில் உள்ள இந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது.
இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து மகாசபை கோயில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டது. இது குறித்து வைரலாகிய ஒரு வீடியோவில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் பக்தர்களைத் தாக்குவதும், கோவில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்!

இந்திய – ஈக்வடார் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை Ecuador FM India Visit

இந்திய – ஈக்வடார் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை

Ecuador FM India Visit : ஈக்வடார் வெளியுறவு அமைச்சர் கப்ரியேலா சோமர்ஃபெல்ட் ரோசெரோ மூன்று நாள் இந்திய பயணயமாக இன்று புதுடெல்லி வந்தார்….

மேற்குவங்க சட்டமன்றத் தேர்தல்.. 142 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு Assembly Election 2026

மேற்குவங்க சட்டமன்றத் தேர்தல்.. 142 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு

Assembly Election 2026: மேற்கு வங்க இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று 142 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது….

ஓசூரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. பால் வியாபாரி கைது! Hosur

ஓசூரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. பால் வியாபாரி கைது!

Hosur: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட குற்றத்தில் பால் வியாபாரி கைது செய்யப்பட்டார்….

2027ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள்.. விண்ணப்பங்கள் வரவேற்பு.. முழு விவரம்! Padma Awards 2027

2027ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள்.. விண்ணப்பங்கள் வரவேற்பு.. முழு விவரம்!

Padma Awards 2027: 2027ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை 2026 ஜூலை 31க்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது….

கேரளத்தில் பா.ஜ.க மாவட்ட நிர்வாகி குத்திக் கொலை.. கொலையாளி கைது.. போலீசார் விசாரணை! Kannur BJP Leader Geethamma murder case

கேரளத்தில் பா.ஜ.க மாவட்ட நிர்வாகி குத்திக் கொலை.. கொலையாளி கைது.. போலீசார் விசாரணை!

Kannur BJP Leader Geethamma murder case : கண்ணூரைச் சேர்ந்த பாஜக மகளிர் மோர்ச்சா தலைவி கீதம்மா, கடந்த வெள்ளிக்கிழமை இரவு தன் மகன் கிறிஸ்டி…

மாநிலங்களவை அரசியல் மாற்றம்.. ஆம் ஆத்மி டூ பா.ஜ.க.. ராஜ்யசபா ஒப்புதல்! Merger of 7 AAP MPs with BJP

மாநிலங்களவை அரசியல் மாற்றம்.. ஆம் ஆத்மி டூ பா.ஜ.க.. ராஜ்யசபா ஒப்புதல்!

Merger of 7 AAP MPs with BJP : 7 ஆம் ஆத்மி எம்பிக்கள் பாஜகவுடன் இணைவதை ராஜ்யசபா தலைவர் ஏற்றுக்கொண்டார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com