Mumbai: சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் மனைவி மீனாதாய் தாக்கரேவின் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிவப்பு வண்ணப்பூச்சை தெளித்துள்ளனர். இது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Mumbai: சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் மனைவி மீனாதாய் தாக்கரேவின் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிவப்பு வண்ணப்பூச்சை தெளித்துள்ளனர். இது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on: September 17, 2025 at 2:01 pm
மும்பை, செப்.17, 2025: சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரேவின் மறைந்த தாயாரின் சிலை அவமதிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், சிவசேனா (UBT) தலைவர்களும், தொண்டர்களும் இன்று (புதன்கிழமை) மும்பையின் சிவாஜி பூங்காவில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் மனைவி மீனாதாய் தாக்கரேவின் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிவப்பு வண்ணப்பூச்சைத் தூவியுள்ளனர். இதற்கிடையில், உத்தவ் தாக்கரே தனது கட்சி தொண்டர்களை பொறுமையாகவும் அமைதியைப் பேணவும் வலியுறுத்தினார். எனினும், சிலையைப் பாதுகாக்கத் தவறியதற்கு மாநில அரசை குற்றஞ்சாட்டினர்.
இந்தியா-பாக் கிரிக்கெட்டுக்கு எதிர்ப்பு
இந்த நிலையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு எல்லை தாண்டிய நடவடிக்கை சிந்தூர் தொடங்கப்பட்ட போதிலும், துபாயில் பாகிஸ்தானுடனான இந்தியாவின் போட்டிக்கு சிவசேனா பெண் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையும் படிங்க :பிரதமர் தாயார் குறித்து அவதூறு.. ஏ.ஐ வீடியோவை நீக்க காங்கிரஸூக்கு நீதிமன்றம் உத்தரவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com