குற்றப் பத்திரிகையில் ராகுல், சோனியா பெயர்; ரேவந்த் ரெட்டி மௌனம் ஏன்? கே.டி ராமா ராவ் கேள்வி

National Herald Case: நேஷனல் ஹெரால்டு வழக்கில், குற்றப் பத்திரிகையில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் பெயர் இடம் பெற்றுள்ள நிலையில், தெலங்கானா காங்கிரஸ் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மௌனமாக இருப்பது ஏன் என பி.ஆர்.எஸ் செயல் தலைவர் கே.டி ராமா ராவ் கேள்வியெழுப்பியுள்ளார்.

Published on: April 19, 2025 at 5:26 pm

ஹைதராபாத், ஏப்.19 2025: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்தக் குற்றப் பத்திரிகையில், காங்கிரஸின் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸார் நாடு முழுக்க பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தெலங்கானா காங்கிரஸ் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மௌனம் காப்பது ஏன் என பாரதிய ராஷ்ட்ரீய சமிதி (பிஆர்எஸ்) தலைவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு பி.ஆர்.எஸ் செயல் தலைவர் கே.டி. ராமா ராவ் அளித்த பேட்டியில், “நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் பெயர்கள் அமலாக்கத் துறையின் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன.

இதனை கண்டித்து ஓர் அறிக்கை கூட ரேவந்த் ரெட்டி விடவில்லை. இது ஏன்? அவரின் மௌனம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “தற்போது ரேவந்த் ரெட்டி வெளிநாட்டில் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார் என்பது எனக்கு தெரியும் எனவும் கே.டி. ராமா ராவ் தெரிவித்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில், சோனியாவும் ராகுல் காந்தியும் தற்போது அதே வழக்கில் 2015 முதல் ஜாமீனில் உள்ளனர்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு, ₹2,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை கையகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கை பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சாமி தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ராகுல், சோனியா மீது வழக்கு: பீகாரில் ரயிலை மறித்த காங்கிரஸார்!

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு செக்.. சுதர்சன ரெட்டியை களமிறக்கிய எதிர்க்கட்சிகள்.. தி.மு.க வாக்கு யாருக்கு?
Sudershan Reddy

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு செக்.. சுதர்சன ரெட்டியை களமிறக்கிய எதிர்க்கட்சிகள்.. தி.மு.க வாக்கு யாருக்கு?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com